ஊருக்கு வந்த உடன் அவர்கள் வீட்டில் அவனது நண்பர்கள் குடும்பத்துடன் வந்து காத்திருந்தனர்.
அபுபக்கரும், சகாயராஜூம்தான் அவர்கள்.
“என்னப்பா நல்லாருக்கீங்களா?”
“நல்லாருக்கோம்மா. அப்பா எப்படியிருக்காங்க? கவிதா எப்படியிருக்கா?”
விசாரித்துக்கொண்டே அவர்கள் கொண்டு வந்த பைகளை தாங்கள் வாங்கிக்கொண்டனர்.
அவர்கள் மனைவியர் இருவரும் தயாராய் வைத்திருந்த ஆரத்தித் தட்டை எடுத்துக்கொண்டு வந்து வடிவின் கையில் கொடுத்தனர்.
அவள் புன்னகையுடன் வாங்கிக்கொண்டாள்.
அவள் ஏற்கனவே போனில் சொன்னபடி அவர்கள் எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருந்தனர். சமையலும் தயாராகியிருந்தது.
ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்து வந்த வடிவு மருமகளுக்கு மகனின் நண்பர்களை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
இருவருமே க
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் டீ கொண்டு வர்றேன்.”
டீயை அவளிடம் நீட்டினாள்.
டீயைக் குடித்து முடித்ததும் ஏதோ சொல்வதற்கு ஆயத்தமானாள் கீழ்வீட்டுப் பெண்மணி.
“கொஞ்சம் இங்கே உட்காரும்மா.”
அவளும் மரியாதை கருதி அருகே அமர்ந்தாள்.
“மாப்பிள்ளை உனக்குச் சொந்தமாம்மா?”
“ஏன் கேட்கறீங்க?”