மனதிற்குள்ளே புலம்பிக்கொண்டேயிருந்தாள்.
அன்று மாலையே வடிவு மருமகளைக் காண வந்துவிட்டாள்.
அப்போது வரவேற்பறையில் சோபாவில் சோர்வாக படுத்திருந்தாள் சிவரஞ்சனி.
மாமியாரைக் கண்டதும் பதட்டத்துடன் எழுந்து அமர்ந்தாள்.
“வாங்கத்தே.”
“எப்படி இருக்கேம்மா? வயித்து வலி பரவாயில்லையா?”
“இப்ப பரவாயில்லைத்தை.”
“வாங்கண்ணி. மருமகளுக்கு உடம்பு முடியலைன்னதும் உங்க மனசு கேட்கலையா?”
“ஆமாண்ணி. ஏற்கனவே உங்க மாப்பிள்ளை ஊருக்குப் போனதிலேருந்து அவ மனசே சரியில்லாம இருக்கா. இந்த நேரத்தில் உடம்பும் சரியில்லைன்னா. அம்மாக்கிட்ட இருக்கும்போது மனதிற்கும் தெம்பா இருக்கும்ல. இன்னும் இரண்டு நாட்கள் இருந்துட்டு வரட்டும்.”
“சரியண்ணி.”
ஆனால் இது எதுவும் சிவரஞ்சனிக்கு தெரியாது.
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அவனது தந்தையின் இடத்தில் இருந்து எல்லாமே அவனுக்கு கருப்பையாதான் செய்தான்.
அவனும் தனக்குத் தேவையானதை தன் சகோதரனிடம்தான் கேட்பான்.
அதனாலேயே தன் அண்ணியை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பார்த்துப் பார்த்துச் செய்கிறான்.
அன்று ஊரே மிகவும் பரபரப்பாய் இருந்தது.