அவனது இதயத்துடிப்பில் தலை சாய்த்து அவனது இதமான , வெம்மையான அணைப்பில் கட்டுண்டு இருந்தவளுக்கு அவன் மேல் அளவில்லா காதல் பெருகியது. அவனது இடையில் கோர்த்திருந்த தன் கைகளை இறுக்கினாள்.
யோவ் என் பூ வாசத்தை எல்லாம் எடுத்துட்டியா? போச்சு போச்சு என் பூ வாசமெல்லாம் போச்சு..
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
போடி ஒரு வாரம் கண்ணுல படாம இருந்துட்டு வந்து ஓவரா மிரட்டுற? தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் ஜீவன்.
அவன் அணைப்பிற்குள் இருக்கும் ஒவ்வொரு நேரமும் தான் உணரும் பெருமித உணர்வை அப்போதும் உணர்ந்து கொண்டு இருந்தாள். அவளுக்கு அவன் காதல் கிட்டுமா? என்று தவமாய் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. மற்ற பெண்களை அவன் காணும் போதெல்லாம், பேசும் போதெல்லாம் ஏக்கமும் பொறாமை உணர்வும் அடைந்திருந்ததும் உண்டு. இன்று, இதோ வைத்துக் கொள் என்று முழு மொத்த அன்பையும் சுமந்துக் கொண்டு அவனே அவளுக்காய் இறைவன் தந்திருக்க… எவ்வளவு பெரிய வரம்.
மிஸ் யூ எனும் அவனது நெற்றி மற்றும், உச்சந்தலை முத்தங்கள் தொடர, அவள் அவளாகவே இல்லை. அவளுடைய காதலன், காவலன் , அன்பை நிறுத்தாமல் பொழியும் வருணனின் வருடலில் , முத்தங்களில் கால நேரம் மறந்து லயித்திருந்தாள் திவ்யா.
ஒற்றை தீண்டலில்
இரு காயங்கள்.
ஒரு அழுத்தத்தில் வெட்டுண்டு போகும்
இரு உடல்கள்.
ஒரே உயிர் கூட்டில் வசிக்கும்
இரு உயிர்கள்,
காதல் என்பது
இருபக்கம் கூர் தீட்டியதொரு வாளன்றி வேறில்லை
தொடரும்
{kunena_discuss:1231}