“தேங்க் யூ கண்ணம்மா..”
“இதெல்லாம் பத்தாது இன்னொரு ஐஸ்கீரீம் வேணும்..”,என்று அனைத்தையும் இயல்பாகவே எடுத்துக் கொண்டவளையும் ஒருவித சூறாவளி புரட்டிப் போடத்தான் போகிறது என்பதை அந்நேரம் அறிந்திருக்கவில்லையே..
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அடுத்த வந்த நாட்கள் அனைத்துமே வெண்பாவுக்கு சற்று கொடுமையாகத் தான் இருந்தது.காலை ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிச் செல்பவன் இரவு பத்து பதினோரு மணிக்கு தான் வீடு திரும்பினான்.
சில நேரங்களில் மதியத்திற்குப் பின் சிறிது நேரம் வீட்டிற்கு வந்து செல்வான் அப்போதும் வெண்பா நடனப்பள்ளிக்குச் சென்றுவிடுவதால் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.
இரவு வந்தபின் தன் அயர்வை மறைத்து அவன் அவளோடு பேச நினைத்தாலும் வெண்பாவிற்கு பாவமாய் இருக்கும்.முகமே அத்தனை களைப்பையும் அப்பட்டமாய் காட்டும்.சிறிது நிமிடங்கள் பேசிவிட்டு உறங்கி விடுவார்கள்.
ஞாயிறு ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்றானது.அன்றும் வீட்டு வேலைகள் தேவையான பொருட்கள் வாங்குதல் என பொழுது கழிந்து விட இருவருக்குமான நேரம் என்ற ஒன்றே இல்லாமல் போனது.
எதுவுமே கண்கூடாய் நடக்கும் போதுதான் அதன் தாக்கம் அதிகமாய் நமை வாட்டி எடுக்கும்.வெண்பாவின் நிலையும் அதுவாகவே இருந்தது.செவி வழி கேட்கும்போது சாதாரணமாய் இருந்த விஷயம் இப்போது பூதாகரமாய் இருந்தது.நம் மனமே நமக்கான எதிரி பல நேரங்களில்.அப்படிதான் வெண்பாவும் ஏதேதோ எண்ண ஆரம்பித்திருந்தாள்.
திவா மாறி விட்டானோ தங்கள் காதலில் சற்றே விரிசல் வந்து விட்தோ..வேண்டுமென்றே தன்னை தவிர்க்கிறானோ இப்படியாய் இன்னும் என்னென்னவோ..
அனைத்திற்கும் மகுடமாய் அவளது குழம்பிய குட்டையான மனதில் தனக்கு சாதாகமாக மீன் பிடிக்க சில வாரங்களில் அவள் வீடு வந்திறங்கினார் சுலோச்சனா..
தொடரும்
{kunena_discuss:1221}