(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 07 - அனிதா சங்கர்

Kathal kathalitha kathaliyai kathalikkum

ன்னத்தின்  வீட்டை அடைந்தவள் கதவை தட்டினாள்...அதிகாலை நேரம் என்பதால் மரகதம் கதவை திறந்தார்...

கதவை திறந்தவரை கூட கவனிக்காமல்...புயலென உள்ளே நுழைந்தவள் பார்த்தது கட்டிலில் ஓய்ந்து போய் படுத்திருந்த அவளது அன்னையை தான்... ஒரு மாதத்திற்கு முன்பு  பார்த்த அன்னைக்கும் இப்பொழுது பார்க்கும் அன்னைக்கும் அவள் வித்தியாசத்தை உணர்ந்திருந்தாள்...

உடல் மெலிந்து இருந்தார் அவள் அன்னை...அவளது அன்னையை பார்க்க பார்க்க அவளுக்கு தனது அப்பா மீதும் தேவிம்மா மீதும் கோப கோபமாக வந்தது...

தனது அன்னையின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவள் தனது அன்னையின் கைகளை மெதுவாக பிடித்துக்கொண்டாள்..

அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது...அவளால் தனது அழுகையை அடக்க முடியவில்லை...

அவளது அழுகை ஒலியில் கண் முழித்தார் அன்னம்...தனது அன்பு மகளை பார்த்த அன்னம் எழுந்து அமர ,”அம்மா...”என்ற அழைப்புடன் அவரை அணைத்துக்கொண்டாள் தேன்நிலா..

“அ..அம்மா..எப்படி இருக்க அம்மா..”

“நான் நல்லா இருக்கேன்டா...”

“பொய் சொல்லாதம்மா நான் போனப்ப இருந்ததை விட நீ இப்ப எப்படி இளைச்சி போய்ட்ட தெரியுமா...”என்று  தேன்நிலா கேட்க

“அது என்னோட பொண்ண பார்க்காத ஏக்கம்...”என்று அவர் சொல்ல

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அ..அம்மா..,எதுக்கு என்கிட்ட சொல்லாம விட்டாங்க...”என்று அவள் அன்னையை தேன்நிலா கேட்டாள்..

“அம்மா தான்டா சொல்ல வேணாம்னு அப்பாகிட்ட சொன்னேன்..என்னோட பொண்ணு படிப்பு விஷயமா வெளியூருக்கு போயிருக்கப்ப...இப்படி என்னோட உடம்பு முடியலைனு சொன்ன நீ பதறியடிச்சிட்டு ஓடி வருவனு தான் நான் சொல்ல வேணாம்னு சொன்னேன்...அது இல்லாம என்னோட பொண்ணு நல்லா படிச்சி நல்லா வளர்ந்து நிக்கிறத நான் பார்க்க வேண்டாம்...”என்று அன்னம் சொல்ல

“நீ என்ன சொன்னாலும் நான் ஒதுக்க மாட்டேன்... அப்பாகிட்டையும், தேவியம்மாகிட்டையும் நான் பேசமாட்டேன்...நீ சொன்ன மாதிரி உன்னோட பொண்ணுக்கு படிப்பு முக்கியம் தான்...ஆனா அதைவிட  அவளோட அம்மா அவளுக்கு முக்கியம்...

நான் வளர்ந்து உயரத்துல இருக்குறப்போ என்னோட சேர்ந்து அந்த சந்தோஷ அனுபவிக்க எங்க அம்மா எனக்கு வேணும்...

அதனால எனக்கு முதல எனக்கு என்னோட அம்மா தான் முக்கியம்...இப்ப இல்லைனா அடுத்த கொஞ்ச நாள்ல என்னால அந்த ப்ராஜெக்ட்ட செய்ய முடியும்..

ஆனா என்ன கண்ணும் கருத்துமா வளர்த்த உனக்கு உன்னால முடியாத நேரத்துல பணிவிடை பண்ணாம பின்ன எப்ப பண்றது...”என்று அவள் திரும்பி தனது அன்னையை கேட்டுக் கொண்டு அவரது மடியில் படுத்துக்கொண்டாள்...

தனது பெண் வளர்ந்துவிட்டதை உணர்ந்தார் அன்னம்...தனது பெண் தன் மீது வைத்துள்ள பாசத்தை பார்த்து அவரது மனம் நெகிழ்ந்தது...

அவளை ஆழ ரசித்தவருக்கு அப்பொழுது தான்  அவளது கண்ணில் இருந்த களைப்பு தெரிந்தது...

“என்னோட செல்லத்துக்கு அம்மா  டீ போட்டு கொண்டு வருவேனா அவ குடிச்சிட்டு தூங்குவாளாம்...”என்று அன்னம் சொல்ல அவரது மடியில் இருந்து எழுந்தவள் அவரது கைகளை பிடித்து தடுத்து

“என்னோட அம்மாக்கு இந்த செல்லகுட்டி போட்டு தருவாளாம் எங்க அம்மா சமத்தா குடிப்பாங்களாம்..”என்று கூறிவிட்டு தனது அன்னைக்கும் தனக்கும் டீ போட சென்றாள் தேன்நிலா..

“அம்மா உங்களுக்கு பாலா..டீயா..”என்று தனது அன்னையை கேட்டுக்கொண்டே திரும்பியவள் அப்பொழுது தான் பார்த்தால் தனது மச்சான்  திண்ணையில் தனது பாட்டியுடன் அமர்ந்துக் கொண்டு தங்களை பார்ப்பதை...அவனை பார்க்காததுப் போல் சமையலறைக்குள் நுழைந்தாள் தேன்நிலா.

தனது அன்னைக்கு பாலை திட்டமான சூட்டில் ஆத்திகொண்டிருந்தவளின் அருகே  நிழல் ஆட நிமிர்ந்துப் பார்த்தால் அவளது மச்சான் வேந்தன் நின்றுக் கொண்டிருந்தான்...

என்ன வேண்டும் என்பதுபோல் அவள் அவனை பார்க்க...”உன்ன மிஞ்ச ஆளே இல்லைடி..பேசாம நீ சீரியல் நடிக்க போகலாம்...அப்பா...செம நடிப்புடா சாமி...”என்று சொன்னவன் அவளது பதிலை எதிர்பாராமல் அந்த இடத்தை  விட்டு நகர்ந்தான்...

அவன் அவ்வாறு சொன்னதும் அவளுக்கு வலிக்க தான் செய்தது...அவன் தனது அன்னை மேல் உள்ள அக்கறையில் தான் சொல்கிறான் என்று நினைததவளுக்கு அந்த வலியும் இன்பமாக தான் இருந்தது...

அதன்பிறகு தனது அன்னையை கவனிக்க ஆரம்பித்தால் தேன்நிலா...

தேன்நிலா அழைக்க வந்த  கதிரேசன்  அருகில் இருந்த டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தார்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.