(Reading time: 15 - 30 minutes)

'நீ பேசாம இரு வெண்பா..அம்மாக்கு தெரியும்..”,என்றவர் அவளுக்கு பேஷியல் மெனிக்யூர் பெடிக்யூர் என அனைத்தையும் பண்ண சொல்ல அடுத்து வந்த மணி நேரங்கள் அப்படியே கரைந்தது.

துபாயில் இருந்தவரை இதெல்லாம் வெண்பாவிற்கு வழக்கமான விஷயம்தான்.அம்மாவும் அக்காவும் செய்துகொள்ளும் போது தானும் செய்ய வேண்டுமென்றே பழகிப் போனவள் தான்.

ஆனால் இந்தியா வந்தபிறகே அதன் ஆடம்பரம் புரிந்தது.அதுமட்டுமில்லாமல் தன் வருமானத்திற்கு இது கட்டுப்படி ஆகாது என நிறுத்திவிட்டாள்.அதிகபட்சம் சாதாரண பார்லருக்குச் சென்று த்ரெட்டிங் செய்து வருவாள் அவ்வளவே.

இன்று இந்த நட்சத்திர ஹோட்டல் அனுபவமும் அவர்களின் செய்முறையும் மனதை வெகுவாய் இலகுவாக்கி இருந்தது வெண்பாவிற்கு.

அனைத்தும் முடிந்தபின் தன்னை கண்ணாடியை பார்த்தவளுக்கு இன்று திவா தன்னை கண்டால் எப்படி ரியாக்ட் செய்வான் என்ற கேள்வியே முதலாய் வந்தது.

“வாவ் வெண்பா பாத்தியா எப்படியிருக்க வேண்டிய பொண்ணு இவ்ளோ நாள் எப்படியிருந்துருக்க..”

“ம்ம் ஆமா ம்மா உண்மையா ரொம்ப ரிலாக்ஸ்டா பீல் பண்றேன்.இன்னைக்கு திவா என்னை பார்த்தா அவ்ளோதான் அப்படியே ஷாக் ஆகப் போறாரு..”

“ம்ம் நியாயமா இதெல்லாம் அவரு தான் பண்ணிருக்கனும்.பெரிய டாக்டர் ஆகா ஓகோனு சொன்னா பத்தாது..”

“ம்மா இதெல்லாம் எனக்குதேவைனு படல பண்ணிக்கல அவ்ளோ தான்.அப்படியே நா கேட்டுருந்தாலும் திவா ஒண்ணும் வேண்டாம்னு சொல்லிருக்க மாட்டாரு..”

“அப்படி என்ன காதலோ அம்மாகிட்ட கூட விட்டுக் கொடுக்க முடில…ம்ம்ம்..”

“சரி ம்மா நா கிளம்புறேன்..ரொம்ப லேட் ஆச்சு நாளைக்கு நா லீவ் தான் மார்னிங் வரேன் நாம எங்கேயாவது வெளில போலாம்..”

“ம்ம் ஓகே ஷுவர்..”

வீட்டிற்கு வந்தவளை சிந்தாம்மா கண்ணில் ஆச்சரியத்தோடு பார்த்தார்.”பாப்பா ஒரே நாள்ல ஆளே மாறிட்ட..அழகாயிருக்க கண்ணு..சுத்தி போடனும் தம்பி வரட்டும்.”,என்று திருஷ்டி கழித்துச் சென்றார்.

ஒருவித எதிர்பார்ப்போடே முகம் கழுவி உடைமாற்றியவள் ஜன்னல் வழியே பார்க்கிங்கை வெறித்திருந்தாள்.சில நிமிடங்களில் திவ்யாந்தின் கார் வர வேகமாய் தன்னை கண்ணாடியில் சரிபார்த்தவளுக்கு தன்னை நினைத்தே சிரிப்பாய் இருந்தது.

வழக்கம் போல் சிந்தாம்மாவிடம் இரண்டொரு நிமிடம் பேசிவிட்டு அறைக்குள் நுழைந்தவனுக்கு முதுகு காட்டி கைகளை பிசைந்தவாறே நின்றிருந்தவளை கண்டு ஒரு நொடி குழம்பியவனாய் “கண்ணம்மா என்னாச்சு?”,எனக் கேட்க விழிகளில் மின்னிய ஆர்வத்தோடு அவன்புறம் திரும்பினாள்.

அடுத்த நொடி திவ்யாந்தின் கண்களில் ஒரு ரசனைப் பார்வை குடிக் கொண்டது.

“என்ன டா இது என் மாமியார் வந்த இரண்டாவது நாளே என் பொண்டாட்டியை இப்படி மாத்திட்டாங்க..”,என விளையாட்டாய் கூறினாலும் கைநீட்டி அவளை தன்புறம் இழுத்தவன் இடைப்பற்றி இன்னுமாய் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

“நான் வேண்டாம்னு தான் சொன்னேன் அம்மா தான்..ஆனா முடிச்ச அப்பறம் பார்த்தா எனக்கே கொஞ்சம் ப்ரஷ் பீல் திவா..மேபி  ரொம்ப நாளுக்கு அப்பறம் ப்யூட்டி கேர் எடுத்ததுனால ஐ அம் பீலிங் சில்லி நிஜமா..நீங்க எப்போ வருவீங்கனு பாத்துட்டே இருந்தேன் தெரியுமா..எனக்கே சிரிப்பு வந்துருச்சு ஏதோ நியூலி மேரிட் மாதிரி பிகேவ் பண்றோமேனு..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவள்போக்கில் பேசிக் கொண்டிருக்க திவாவோ மொத்தமாய் அவளிடம் தொலைந்து கொண்டிருந்தான்.

“எத்தனை வருஷம் ஆனாலும் நீ எனக்கு புதுப் பொண்டாட்டி தான் கண்ணம்மா..எனக்கே எனக்கான என் காதல் கண்ணம்மா..”,விரல்கள் அதுவாய் கன்னம் அழுத்த பேச்சின் சத்தம் குறைந்து விரல்களின் பாஷை அதிகரித்திருந்தது.

வெகு நாட்களுக்குப் பிறகான ஒரு இலகுநிலையை இருவருமே மனசார உணர்ந்திருந்தனர்.கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தவனின் காதுகளில் மென்மையாய்,”மிஸ்ட் யூ சோ மச் திவா..”

“கண்ணம்மா..”,அவளின் குரல் திவ்யாந்தை ஏதோ செய்தது.நிமிர்ந்து அவள் முகம் பார்க்க முயற்ச்சித்தவனை விடாமல் மேலும் தன்மேல் சாய்த்துக் கொண்டவளுக்கு கண்களில் நீர் கோர்த்திருந்தது.

“தெரில திவா..என்ன சொல்லறதுனு தெரில ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன் திவா.இப்போ இந்த செகண்ட் கூட அப்படியே உங்களை எனக்குள்ள ஒளிச்சு வச்சுக்கணும்னு தோணுது.எங்கேயும் போகவிடாம என்னை விட்டுநகர விடாம பிடிச்சு வச்சுக்கணும்னு தோணுது.

நா ஏன் இப்படி ஆய்ட்டேன்னு எனக்கே தெரில.கண்டிப்பா நீங்க என்கூடவே இருக்க முடியாது தான்.ஆனா பார்த்து பேச கூட முடியாத அளவு ஒருநாள் நகரும்போது மனசு ரொம்ப கஷ்டமாயிருக்கு திவா..லவ் யூ லவ் யூ லவ் யூ”,என்றவள் அவன் முகம் மொத்தமும் இதழ் பதித்திருந்தாள்.

“கண்ணம்மா..ரிலாக்ஸ்..நீ சொல்லிட்ட நா சொல்லல அவ்ளோ தான்.ஒவ்வொரு நிமிஷமும் உன் நினைப்பு மட்டும் தான் டா என்னை நடமாட வச்சுட்டு இருக்கு.சில தவிர்க்க முடியாத காரணத்துனால தான் இதை பாதில விட முடில மிஞ்சி போனா ஒரு பத்து நாள் டா..அதுக்கப்பறம் நாம கண்டிப்பா ஒரு ட்ரிப் போய்ட்டு வரலாம்.நமக்கே நமக்கான நேரம்..சரியா..ப்ளீஸ் நீ அழாத..என்னால தாங்கிக்க முடியாது டா..”

இன்னுமாய் அவனோடு இறுகிக் கொண்டவளை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் முதுகை ஆதரவாய் தடவியன் மென்மையாய் அவள் செவிகளில் இதழ் உரச,

தாரையடி நீ யெனக்கு, தண்மதியம் நானுனக்கு;

வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;

தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்

ஓருருவ மாய்ச்சமைந்தாய்! உள்ளமுதமே! கண்ணம்மா!

சட்டென அவன் விழி கண்டவள் சிறிதும் தாமதியாது தன் அதரங்களை அவனோடு இணைத்திருந்தாள்.

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1221}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.