சலசலக்கும் நீரோடை அருவியாய் மண்ணைத் தொடுவதுபோல் அனைத்தையும் கொட்டியிருந்தான் அவன்..!!
“நேற்றைக்கு பாலா சாரோட ஆபீஸில் டிஸ்கஸ் பண்ணமே அந்த கேஸ்.. அதுக்கு மூலக்காரணமே அந்த மனுஷன்தான்.. என்னால டைஜஸ்ட் பண்ணிக்கவே முடியல.. என்ன பண்றது ஒன்னுமே தெரியல..”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
பிரஜி சொன்னவற்றைக் கேட்டு மற்ற இருவருக்கும் அதே அதிர்ச்சிதான்.. பிரஜியின் முகத்திலிருக்கும் பாவம் கண்டு தங்களைத் தாங்கள் கட்டுப்படுத்துக்கொண்டிருந்தனர்..
“என்ன பண்றது இப்ப..??”, என்றவனைக் கண்டு அத்தனை பரிதாபம் தோன்றியது..
தோற்றுவிட்ட குழந்தையாய் காட்சியளித்தான் அவன்..
“இவங்க அக்காக்கிட்ட போவோமாடா..?? அவங்க ஏதாவது வழி இருந்தா சொல்லுவாங்க..”, இது கவின்..
“நானும் அதைத்தாண்டா நினைத்தேன்.. நீ என்ன சொல்ற நிஷா..??”
“அக்காக்கிட்ட போறதைப் பத்தி பிரச்சனையில்லை.. ஆ..னா..ல்..”
“ஆனால்..?? ஆனால் என்ன நிஷ்..??”
“எங்க அக்காவோட அடுத்த ஸ்டெப் உங்க அப்பாவோட அரெஸ்ட்டாத்தான் இருக்கும்..”, பரிதாபமாக..
“கண்டிப்பா இல்லை நிஷா உங்க அக்கா அப்படி பண்ண ஹண்ரெட் பர்ஸென்ட் சான்ஸில்லை..”, மழைக்கு கருப்புக்கொடி காட்டிக்கொண்டு தங்கள் முன் பிரசன்னமான பாலாவை மூவரும் எதிர்பார்க்கவேயில்லை..!!
உருவெடுப்பாள்..
{kunena_discuss:1168}