அவளின் பயத்தை அவனுடன் நெருங்கி நடந்துவந்த அவளின் நடுக்கத்திலேயே அவன் உணர்ந்துகொண்டான்.அதை வெளியே தெரியாதவிதமாக அவளின் காதோரம் கிசுகிசுக்கும் குரலில் பேபி என் உயரத்துக்கு நீ ஈகுவலா தெரியனும் என்றாள் உனக்கு ஸ்டூலின் மேல் இருப்பதுபோன்ற சிலிப்பரைதான் நான் வாங்கிகொடுக்கணும் போலேயே குட்டச்சி என்று கேளிபன்னினான்.
அவனின் சீண்டலில் மற்றதை மறந்து சுற்றுபுறத்தில் உள்ளவர்களின் பார்வையில் தானும் அவனைப்போலவே அவனிடம் ரகசியமாக நீங்க நெடுமாடு மாதிரி வளர்ந்துட்டு என்னை குட்டச்சினா சொல்றீங்க நீங்கதான் ஒட்டகச்சிவிங்கி என்று மற்றதெல்லாம் மறந்து அவன் தன்னை சீண்டியதும் கோபம் கொண்டு அவனுக்கு பதில் கொடுத்தால்.
அவர்களின் ரகசிய பேச்சு பார்வைக்கு காதலில் கொஞ்சும் கிளிகள் போன்ற தோற்றத்தை வெளியே காண்பித்தது தீரன் விரும்பியதும் அதுதானே எனவே அவனின் முகம் மந்தகாசமான நிலையையும் சிரிப்பையும் உதிர்த்தது.
அங்கிருந்த ஐம்பது பேர்களில் பெரும்பான்மையானவர்கள் அன்னியதேசத்தவர் என்பது தெளிவாகத்தெரிந்தாலும் மாதவனின் குடும்பம் மற்றும் அங்கு வீட்டு வேளைக்கு பணிபுரியும் வேலையாட்கள் தவிர முன் வரிசையில் வரவளைகப்பட்டு அமர்ந்திருந்த கல்யாணத்தை பதிவு செய்வதற்கான ரெஜிஸ்டார் அவருடன் வந்திருந்த மற்றும் இரு அரசாங்க அதிகாரிகள் அவர்களுடன் மிதுனனின் பெரியப்பா சத்திய மூர்த்தியும் அமர்ந்திருந்தார்.
சத்திய மூர்த்தியை இன்று காலை ஆறுமணிக்கு அவரின் வீட்டில் சந்தித்த மாதவன் அவரிடம் மிதுணனை சந்திக்க விருப்பமிருந்தால் எந்த கேள்வியும் கேட்காமல் தன்னுடன் வரவேண்டும் என்று கூறினான்.
மிதுணனை அவர் தேடாத இடமில்லை அவனை பற்றிய எந்த சேதியும் கிடைக்காது கவலையில் இருந்தவரிடம் மாதவன் பேசியதும் மிதுனனின் மேல் உள்ள பாசத்தில் அவர் பரப்பரப்பானார் மறுநிமிடமே எதைவைத்து இவன் கூறுவதை நம்பி இவனுடன் செல்ல என்று தயங்கி நீங்கள் யார் நீங்க சொல்றதை நான் எப்படி நம்ப என்று கேள்விகேட்டார்.
அவர் அவ்வாறு கேட்டதும் மாதவன் தனது மொபைலில் மிதுனன் காலேஜில் கடத்தப்படும்போது எடுத்த போட்டோ மற்றும் சந்தியா வீட்டில் இருந்து தப்பித்துவரும் போது எடுத்த போட்டோ அத்துடன் அவனை தீரனின் ஆட்கள் வண்டியில் கைத்தாங்கலாக ஏற்றுவதுபோன்ற போட்டோஸ் .அத்துடன் அவனின் காயம் அடைந்த தலையை காண்பித்த வீடியோ பதிவு. அதனை தொடர்ந்து அவனின் காயத்திற்கான சிகிச்சை நடந்த போது எடுத்த போட்டோஸ் .இப்பொழுது அவன் சவுகரியமாக தலையில் கட்டுடன் படுக்கையில் இருக்கும் போட்டோஸ் முதலியவற்றை காண்பித்து இப்போ நம்புறீங்களா என்று கேட்டான்.
அவனை யார் முதலில் கடத்தியது இப்போ யாரிடம் அவன் உள்ளான் என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.
நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் கூற முடியாது ஒரு சிலது மட்டும் சொல்கிறேன் என்றவன் மிதுணனை கடத்தியது மினிஸ்டர் ரங்கராஜன் அவரிடம் இருந்து தப்பித்த மிதுணனை மீண்டும் மினிஸ்டரின் ஆட்களிடம் மாட்டாமல் சேப்பாக எங்க பாஸின் கஸ்டடியில் கொண்டுசென்று அவரின் காயத்திற்கு டிரீட்மன்ட் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்
ஆனால் அவரை உங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றால் என் பாஸ்க்கு சில விசயங்கள் உங்களால் நடக்க வேண்டியிருக்கிறது அது என்ன என்று தெரிந்துகொண்டு மிதுணனை மீட்க்க நீங்க என்னுடன் இப்பொழுது வரவேண்டும் என்று கூறினான்.
அவன் காண்பித்த போட்டோசினை பார்த்த சத்தியமூர்த்தி மறுப்பேதும் கூறாமல் அவனுடன் கிளம்பி வந்துவிட்டார் வந்த இடத்தில் அவனை காண்பிக்காமல் அங்கு நடந்துகொண்டிருக்கும் மேல்நாட்டு பாணி பார்டியில் அந்நியதேசத்து மக்களுடன் தான் இருத்தப்பட்டதை பல கேள்விகளுடன் சுற்றிலும் தனது கண்களை ஓட்டி அங்கிருந்த நிலைமையை கிரகித்துகொண்டிருந்தார்.
அங்கு பார்டி சூழல் மட்டும் இல்லை. அதி நவீன பாதுகாப்பு வலயத்துடன் அந்த இடம் இருந்தது பெரிய கோட்டை சுவருடன் கூடிய பிரம்மாண்டமான கதவுகளுக்கு உள்ளே வாச்மேன் இடத்தில் இருந்தவன் அணிந்திருந்த உடையும் கையில் இருந்த துப்பாக்கியும் ஒரு நாட்டின் எல்லையில் பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருக்கும் ராணுவ வீரனினை நினைவு படுத்தினான்.
மேலும் அங்காங்கே துப்பாக்கி ஏந்திய வெள்ளையர்கள் கூர்மையான பார்வையுடன் ரவுண்ட்ஸ் செய்துகொண்டிருந்தனர் .உள்ளே அவர் வந்ததும் மெட்டல் டிடைக்டர் கொண்டு ஆராய்ந்துவிட்டே உள்ளே அனுப்பினர் மேலும் அவரிடம் இருந்த மொபைல் அவர்களால் கைப்பற்றப்பட்டு சுவிச் ஆப் செய்யப்பட்டு அவர்களின் வசமே வைத்துகொண்டனர் திரும்பி போகும் பொது கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
உள்ளே வந்த பின்பே கவனித்தார் அவர் மட்டுமல்ல அங்கிருந்த யாருமே மொபைல் வைத்திருந்த அடையாளம் தெரியவில்லை மேலும் அங்காங்கே சி.சி.டி.வி கேமாராக்கள் பொருத்தப்பட்டு அதுவும் உயரமான இடத்தில் பொருத்தப்பட்டு சுற்றி கொண்டு இருந்தது அங்கிருந்த சூழ்நிலையும் பாதுகாப்பு வசதியையும் மக்களையும் பார்த்தவருக்கு தான் தமிழ்நாட்டில் தானா இருக்கிறோமா? அல்லது வெளிநாட்டிலுள்ள இராணுவ கட்டுப்பாட்டு இடத்திற்குல் உள்ளோமோ என அசந்துபோனார்.