(Reading time: 18 - 35 minutes)

அப்பொழுது யாழிசையுடன் வெளியில் சிகப்பு கம்பளத்தில் நடந்து வந்துகொண்டிருந்தத தீரமிகுந்தனை பார்த்தவர் தீரன் யார் என்று அடையாளம் காண முயர்ச்சித்துகொண்டிருந்தார். மேலும் தீரமிகுந்தன் வெட்ஸ் யாழிசை என்ற எழுத்தை வாசித்தவர் இந்த சூழலில் கல்யாணமா அதில் தன்னை ஏன்  அமரவைத்திருகிறார்கள் என்று யோசனையுடனும் குழப்பத்தோடும் இருந்தார் சத்தியமூர்த்தி.

சி.என்.ஜி சார்பாக தீரமிகுந்தன் என்பவன் வந்திருக்கிறான் என்பதுவரை அவர் கேள்விபட்டிருந்தார் ஆனால் தீரமிகுந்தனை அவர் நேரில் கண்டதில்லை ஆனால் அப்பெயரை கண்டவர் ஒருவேளை சி.என்.ஜி சார்பாக வந்திருக்கும் அந்த அமெரிக்காரன் இடத்திற்குத்தான் தன்னை இப்பொழுது கூட்டி வந்திருகிரார்களோ என்ற ஐயம் எழுந்தது.

அப்படியானால் சி.என்.ஜி க்கு எதிராக மக்களை திரட்டி கூட்டம் போடுவதை தடுக்க மிதுணனை கடத்தி வைத்து தன்னையும் அவர்களுக்கு பணிய வைக்கத்தான் இங்கு கூட்டிகொண்டுவந்திருகிரார்களோ என்ற கேள்வியும் உண்டானது. மேலும் இங்குள்ள சூழலை பார்க்கும் போது இவர்களிடம் இருந்து மிதுணனை  மீட்பதென்பதோ இவர்களை மீறி இந்த இடத்தைவிட்டு தான் வெளியில் செல்வதோ முடியாத காரியம் என்ற எண்ணம் உண்டானது .

இவ்வாறாக அவர் யோசித்துகொண்டிருக்கையில் மேடையில் நின்றிருந்த தீரன் எல்லோரையும் வெல்கம் செய்யும் வகையில் பேச்சை ஆரம்பித்தான்.

மை டியர் பிரண்ட்ஸ்.ஐ வெல்கம் ஆல் தோஸ் ஹூ ஹெவ் பார்டிசிபேட் இன் மை வெட்டிங் செரமோனிஸ்.( அதன்பிறகான தீரனின் உரையை தமிழிலேயே உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்) ஒரு முக்கியமான நண்பர் இன்னும் ஐந்து நிமிடத்துள் இங்கே வந்துவிடுவார் அதுவரை மை பியான்ஷியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

இவள் யாழிசை எஞ்சிநேரிங் மாணவி. மேலும் நான் இவள் மீது காதல் கொண்டது இவளில் மென்மையான குணத்திற்காகவும் என் மாம் ஆசைப்பட்டதுபோல் அனைத்து தமிழ்நாட்டு பெண்களின் ஐடியல் வுமனாக என் கண்களில் பட்டு என் உள்ளத்தை நிறைத்தாலும் மேலும் எனக்கு இவளின் மேல் பற்றுதல் உண்டானதுக்கு காரணம் இவளும் என் அன்னையை போன்ற ஒரு கிளாசிகல் டான்சர் என்ற காரணத்தால் என்று நினைக்கிறேன்.

எது எப்படியோ எங்கேயோ பிறந்துவளர்ந்த நான் இன்று தமிழ்நாட்டில் பிறந்த மிஸ் யாழினியின் மேல் காதலாகி இன்று கரம்பிடிக்கபோவதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பேசிகொண்டிருக்கையில் ஒருவன் பதட்டமாக உள்ளேவந்து தீரனிடம் பேசமுடியாமல் அவனில் பேச்சில் குறுக்கிட தயங்கி நின்றுகொண்டிருப்பதை பேச்சினூடே கவனித்துவிட்டான் தீரன்.

எனவே ஓகே friends உங்களை என்டர்டையின் செய்ய மை பிரன்ட் கிட்டாருடன் காத்திருக்கிறான். ப்ளீஸ் பிளே ப்ரோ.உன்னுடைய இசையை கேட்க்க ஆவலாக இருக்கு என்று கூட்டத்தின் கவனத்தை கிட்டார்புரம் திருப்பிவிட்டவன். இமாமியை அருகில் அழைத்து சிலநிமிடம் யாழிசையிடம் நான் வரும் வரை யாரும் நெருங்க விடாதவாறு  பார்த்துகொள்ளச்சொல்லி விட்டு. பேபி ஒன்செகன்ட் நான் இல்லாமல் மேனேஜ் செய்துக்கோ உடனே வந்துவிடுவேன் என்று கூறிகொண்டிருக்கும்போது டெனிஸ் என்பவன் அவர்களின் அருகில் நெருங்கி பாஸ் என்று அழைத்தவன் அவனிடம் ஒரு வயர்லஸ் மொபைலை கொடுத்தான்

அதை வாங்கி காதிற்கு கொடுத்த தீரன் யாரு மினிஸ்டர் ரங்கராஜனா நம் கேட் முன்னாள் நிற்கிறாரா . நீ சொல்லிவிடு மிஸ்டர் மகேஷ் மல்கோத்ரா அவர்களின் வீடு இது அவரின் ஒப்புதல் கடிதமோ அல்லது அவரின் இன்ஸ்ரக்சனோ இல்லாமல் உள்ளே விடமுடியாது என்று சொல்லிவிடு  மகேஷ் மல்கோத்ரா இப்பொழுது வரும் நேரம்தான் அவரே ரங்கராஜனிடம் பேசி அவரை திருப்பி அனுப்பிவிடுவார் என்று கூறிகொண்டிருகும்போதே

பாஸ் தூரத்தில் மிஸ்டர் மகேஷ் மல்கோத்ரா கார் வருகிறது என்று அந்தபுரம் கேட்டின் வெளியில் நின்றிருந்த கேரி என்பவன் கூறியதை கேட்ட தீரன்

வெல், ஹி மேனேஜ் த சிட்டிவேசன். கூழ் மேன் என்றபடி அழைப்பை துண்டித்தான் தீரன்.

ஆமாம் நேற்று தீரன் நகைக்கடைக்கு ரிங் வாங்குவதற்கு சென்றபோது ஹோட்டலில் அவன் இல்லாததால் சி.என்.ஜி செக்யூரிட்டி கார்ட்ஸ் அவனை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்த வேலையில் நகைக்கடையில் பர்சேஸ் செய்துவிட்டு வெளியேறுகையில் அவனை பார்த்துவிட்டான் அவனின் செகயூரிட்டி டீமில் இருந்த ஒருவன் .

அத்துடன் அவனை பாலோ செய்து அவனின் இருப்பிடத்தை கண்டுபிடித்தவன் உள்ளே என்ன நடக்குது, எப்படி உள்ளே  செல்லலாம் என்று முயன்றும் அந்த கேட்டினுள் நடப்பதை கண்டுபிடிக்கமுடியாமல்  எதையும் அறியமுடியாமல் திரும்பி அந்த டீமை அரேஞ் செய்த பிராங்கிடம் ரிப்போர்ட் செய்திருந்தனர்.

எனவே பிராங் மினிஸ்டர் ரங்கராஜனை தொடர்புகொண்டு மிஸ்டர் தீரன் இருக்கும் இடத்தை கூறி அவனை அங்குபோய் பார்த்து வரும் படியும் ஏனோ தீரன் நம் எதிரிகளிடம் மாட்டிகொண்டிருகிரானோ என்று அச்சமாக இருப்பதாகவும் அவ்வாறு மாட்டியிருப்பது உண்மைஎன்றால் அது யாருக்கும் தெரியக்கூடாது அவ்வாறு தெரிந்தால் இந்த ப்ரோஜெக்ட்டை தொடர்ந்து கொண்டுசெல்வதில் தடங்கள் ஏற்படும் அதனால் எங்களுக்கு மட்டும் லாஸ் அல்ல உங்களுக்கு கிடைக்கும் பலகோடி கமிசனும் கிடைக்காமல் போய்விடும் என்று  கூறி பிரைன் வாஸ் செய்து ரங்கராஜனை அங்கு உளவுபார்க்க அனுபியிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.