"தமிழ்... நமக்கு கல்யாணம் அவசரமா முடிஞ்சிடுச்சி அப்டிங்குறதால எல்லாமும் அவசரமா உடனே நடக்கணும் னு இல்ல. எனக்கு ஒரு நல்ல வேல கிடைக்கணும், உன்ன சந்தோஷமா பாத்துக்கணும் இப்டி நெறய விஷயம் இருக்கு. நாம கொஞ்சம் நல்ல நிலைமைக்கு வர வரைக்கும் இந்த சடங்க தள்ளி வச்சிக்கலாமா?" என்று அவளின் பதிலை எதிர்பாத்து தயக்கத்துடனே கேட்டான்.
மெல்ல புன்முறுவலித்தவள், "மாமா... நீ எது செஞ்சாலும் கண்டிப்பா அது சரியா தான் இருக்கும். படுத்துக்கலாமா?", என அவள் சகஜமாக கேட்க, அவள் அவனை புரிந்து கொண்ட சந்தோஷத்துடன் சரி என தலை அசைத்தான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அவளின் நெற்றியில் முத்தமிட்டவன் அவளை தன்னோடு அணைத்து கொண்டு உறங்கினான். அவனின் அணைப்பில் அனைத்தையும் மறந்து தமிழும் நிம்மதியாக உறங்கினாள்.
உயிரே உன் உயிர் என நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே
கனவாய் உன் விழிகளில் காத்திருப்பேன் தினமே
மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்
விழுந்தால் ஒரு விதை என நான் எழுந்தேன்.
தொடரும்
{kunena_discuss:1228}