என்ன செய்வது என்று தெரியவில்லை.
இந்த மாதிரி நேரத்தில் கணவன் தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டானே? என்ற கவலை அவள் மனதை அரித்தது.
வேறு வழியில்லை.
அவனைத்தான் அழைக்க வேண்டும்.
அவனை அழைத்தால் அவன் யாரையாவது அனுப்பி வைப்பான். இந்த நடு இரவில் அவளுக்கு யாரை அழைக்க வேண்டும் என்று தெரியவில்லை.
செல்லை எடுத்து அவனது எண்ணிற்கு அழைக்க ஆரம்பித்தாள்.
காதில் வைத்து அவன் அழைப்பை ஏற்பதற்காக காத்திருந்தாள்.
“நான்தான் கதவைத் திற.”
கணவனின் குரல் கேட்டதும்தான் தாமதம். கதவைத் திறந்தவள் அவன் உள்ளே வந்ததும் அவனை அணைத்துக்கொண்டு ஓவென்று கதறினாள்.
முதலில் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அவளை பரிட்சை எழுத அழைத்துச் செல்லாமல் விட்டதற்காகத்தான் அவள் அழுகிறாள் என்று எண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
னால் இப்போது தாங்கள் வந்திறங்கிய இடம் புதியதாகத் தெரிந்தது.
புரியாமல் அவனை ஏறிட்டாள்.
“நாம ஊருக்குப் போயிட்டு அதன் பிறகு பரிட்சை எழுத வந்தால் நேரம் பத்தாது. அதான் நேரே இங்கேயே வந்துட்டோம். முதலில் போய் குளிச்சுட்டு சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவோம். அதற்குத்தான் நேரம் இருக்கும்.”