ஆவலுடன் கேட்டாள்.
“ஆமா. ஊருக்குத்தான். ஆனால் சென்னைக்குப் போறோம்.”
அவள் முகம் வாடியது.
“இப்ப எனக்கு முக்கியமான வேலை இருக்கு. ஊருக்குப் போனா அம்மா விடமாட்டாங்க. தங்கிட்டுத்தான் போகனும்னு சொல்லுவாங்க. இப்ப போன் பண்ணப்போ கூட அதான் சொன்னாங்க. நான் இப்ப வரமுடியாது. தீபாவளிக்கு வர்றேன்னு சொல்லிட்டேன்.”
“சரி.”
சுரத்தேயில்லாமல் சொன்னாள்.
“இராத்திரி ஏர் பஸ்ஸில் டிக்கெட் புக் செஞ்சிருக்கேன். ஸ்லீப்பர்தான். அதனால் தூங்கனுமேன்னு கவலைப்படவேண்டாம். இப்பக் கிளம்பு.”
‘ராத்திரிதானே பஸ். எதுக்கு இப்பவே கிளம்பு. கிளம்புன்னு சொல்றார்.’
மனதிற்குள்ளேயே புலம்பினாள்.
அவன் கூட தனியாக இருக்கும் நேரத்தை அவள் விரும்பினாள்.
இத்தனை நாட்கள் அவர்கள் ஒரே வீட்டில் இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
் அது மாதிரி சென்று அமராலாம் என்று சொன்னான்.
அங்கிருந்த பாதுகாப்பிற்காகப் போடப்பட்டிருந்த கம்பியைத் தாண்டி அங்கே செல்ல வேண்டும். அவள் தயங்கினாள்.
ஆனாலும் அவன் இருக்கும் தைரியத்தில் அவன் கையைப் பற்றிக்கொண்டே தாண்டினாள். அவனுடன் கூட அமர்ந்திருந்த அந்த தருணத்தை மிகவும் ரசித்தாள்.