“என்ன இனிமேத்தான் சமைக்கப் போறியா? இப்ப மணி என்னன்னு தெரியுமா? சரியான கும்பகர்ணியா இருப்பே போல.”
“இன்னிக்குத்தான் இப்படித் தூங்கிட்டேன். இப்ப எழுந்துக்கறேன்.”
“இனி நீ சமைக்க வேண்டாம். நான் ஆர்டர் பண்ணிடறேன். உனக்குச் சாப்பாடு வந்துடும். சாப்பிட்டு மறுபடியும் தூங்கு. வேணும்னா இரவுக்கும் சேர்த்தே ஆர்டர் பண்ணிடறேன்.”
“இல்லல்ல வேண்டாம்.”
“மூச். சத்தம் போடக்கூடாது. சொன்னதைச் செய்.”
“இராத்திரிக்கு நானே செய்திடறேன் மாமா.”
வார்த்தைக்கு வார்த்தை மாமா மாமா என்று அழைக்கிறாள்.
இத்தனை நாட்கள் இந்த அன்பை எல்லாம் எங்கே வைத்திருந்தாள்?
அவன் சொன்ன மாதிரியே உணவு வந்துவிட வாங்கி உண்டவள் அலாரம் வைத்துக்கொண்டு மீண்டும் உறங்கினாள்.
அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டதும் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
் பிறகு சாப்பாடு இறங்குமா?
கண்ணீருடனே சாப்பாட்டு மேசையையும், சமையலறையையும் சுத்தம் செய்துவிட்டு வந்தவளுக்கு இன்று மாலை வரை இருந்த இதம் காணாமல் போயிற்று. அறைக்குள் சென்று படுக்கும் தைரியம் வரவில்லை.
அங்கிருந்த சோபாவில் அப்படியே படுத்துவிட்டாள். விளக்கைக்கூட அணைக்கத்தோன்றவில்லை.