தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 13 - ராசு
இனிய கனவைக் கலைப்பது போன்று யாரோ அவளது கன்னத்தைத் தட்டி எழுப்ப அலுத்துக்கொண்டே எழுந்தாள் சிவரஞ்சனி.
இதுவரை நடந்தது எல்லாம் கனவோ… அப்ப நான் பரிட்சை எழுத போகவில்லையா… மாமா என்கூட வரவில்லையா….
யோசனையுடன் படுத்துக்கொண்டே இருந்தவளை கருப்பையாவின் குரல் உசுப்பியது.
“இன்னும் எத்தனை நேரம்தான் இப்படியே இருக்கிறது? ஊர் வந்தாச்சு. கீழே இறங்கு.”
சொன்ன அவனைப் பார்த்தாள்.
அவர்கள் பேருந்தில்தான் இன்னும் இருந்தனர். அவளை எழுப்பியது அவன்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
எடுத்துப் பார்க்க கணவன்தான் அழைத்திருக்கிறான் என்று புரிந்தது.
“மதியம் என்ன சமையல் செய்திருக்கே?”
அவன் கேட்கவும் பதறிப்போனாள்.
அவள் எங்கே சமைத்தாள்? அவன் சென்றபோது படுத்தவள் இப்போதுதானே எழுந்தாள்.
“நல்லா தூங்கிட்டேன் மாமா. நீங்க வரதுக்குள்ளேயும் சமைச்சிடுறேன்.”