(Reading time: 13 - 25 minutes)

“அத்தை, கோபம் எல்லாம் இல்லை  அத்தை. ஒரு சில விவரங்கள் தெரிய வேண்டி இருந்தது. அதற்காகத் தனியாகக் கிளம்பினான். நான் சொன்னால் நீங்கள் என்னைத் தனியாக அனுப்ப மாட்டீர்கள் என்று தான் அம்மா வீட்டிற்கு என்று சொன்னேன். சாரி அத்தை. ப்ளீஸ்”

“சரிம்மா. “ என்று விட்டு அவர் உள்ளே செல்ல, ராம்

“ஷ்யாம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக பேசி சரி செய்து கொள். கோபத்தை வளர விட்டு பெரிதாக்கி, யாரையும் கஷ்டப் படுத்தாதே.” என, ஷ்யாம் தலையாட்டி விடு சென்றான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இருவரும் அவர்கள் அறைக்குள் செல்லவும், மித்ரா வேகமாக உடை மாற்ற செல்ல, ஷ்யாமோ மெதுவாக அமர்ந்தான். அவள் வெளியே வரவும், ஷ்யாமும் ரெப்ரெஷ் ஆகி வந்தான்.

மித்ரவைத் தேட, அவள் வின்னியைக் கையில் வைத்துக் கொண்டு இருந்தாள்.

தன்னுடைய மியூசிக் கலக்ஷனில், தேடி இளையாராஜா ஹிட்ஸ் போட்டு விட்டான். அதிலும் இன்றைக்குக் காரில் கேட்ட மௌனமான நேரம் பாட்டே அப்போதில்ருந்து மனதில் ரீங்காரமிடவே, அதை செலக்ட் செய்து போட்டு விட்டான்.

பாடலில் வரிகளைப் பாடிக் கொண்டே, மித்ராவின் அருகில் அமர்ந்து வின்னியைக் கையில் வாங்கி ஓரமாக வைத்தான்.

“ஆதலான நேசமோ, கனவு கண்டு கூசுமோ, தனிமையோடு பேசுமோ” என்ற வரிகளைப் பாடி விட்டு, மித்ராவை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான். பின் மென்மையாக அவளின் இதழில் முத்தமிட்டான்.

மித்ராவிற்கோ எதுவும் புரியா நிலை. ஷ்யாமின் கண்கள் வெளிப்படுத்திய உணர்வு, அவளின் இயக்கத்தை நிறுத்தியது.

அவளின் அந்த நிலைக் கண்டு, ஷ்யாம் மென்மையாக புன்னகைக்க, அந்தப் புன்னகை அவளுக்கு ராதா கிருஷ்ணா ஓவியத்தில் அந்த கண்ணனை நினைவூட்டியது. கண்ணனின் கண்களில் தெரிந்த காதல் அவளின் ஷ்யாமிடமும் தெரிய, அப்படியே கட்டுண்டு நின்றாள் மித்ரா.

தொடரும்

Episode # 36

Episode # 38

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.