டீக்கடை ஹோட்டலாக உயர்ந்தது. தனது சகோதரிகளுக்கு நல்லபடியாக திருமணம் செய்துவைத்தான்.
தனது கடமையை முடித்ததும் தங்களை மாதிரியே ஏழைக்குடும்பத்தில் பிறந்த சீதாலெட்சுமியைத் திருமணம் செய்துகொண்டான்.
அவனது தாயார் சாவித்திரி பார்த்த பெண்தான் சீதாலெட்சுமி.
அவர்களுக்குத் திருமணம் ஆன பிறகு சாவித்திரி குடும்பப் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டு மருமகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவரது ஆலோசனையுடன் நல்லபடியாகவே குடும்பம் நடத்தினாள் சீதாலெட்சுமி.
இளவயதுப் பெண்களுக்கு என்னென்னமோ ஆசைகள் இருக்கும். அதனால் தன்னுடைய பெண்கள் வளர வளர அவர்களுடைய தேவைகளைத் தானே மகனிடம் சொல்லி நிறைவேற்றி வைத்தார் சாவித்திரி.
அநாவசிய செலவுகளுக்கு அவர் அனுமதித்ததே இல்லை.
சந்திரசேகருக்கும், அவரது சகோதரிகளுக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்ட கொடுத்த பணத்திற்கு அவர் கணக்கே கேட்டதில்லை. அதற்காக நான் தேவையில்லாமல் செலவும் செய்ததில்லை.”
அவள் சொல்லச் சொல்ல சிவரஞ்சனி தன்னையே நொந்துகொண்டாள்.
தங்களுக்குத் திருமணமாகி சில மாதங்களே ஆகியிருந்த நிலையில் தன் கணவன் தந்தையைப் புரிந்துகொண்ட அளவு கூட தான் புரிந்துகொள்ளவில்லையே.