யோசனையோடே தனது அறைக்குச் சென்றாள்.
“நானும் கொஞ்சம் தூங்கி ஓய்வெடுத்துக்கறேன் அத்தை.”
சொன்னபடியே அவனும் உள்ளே நுழைந்தான்.
மற்ற இருவரும் தத்தம் வேலையைப் பார்க்கக் கிளம்பினர்.
அறைக்குள் நுழைந்த கணவனைக் கண்ணீருடன் பார்த்தாள் சிவரஞ்சனி.
“மாமா. நீங்க புரிஞ்சுக்கிட்ட அளவிற்குக்கூட நான் எங்கப்பாவை புரிஞ்சுக்கலையே.”
அவள் தோளைத் தட்டிக்கொடுத்தான்.
“புரியாமல்தானே அப்படி செய்தாய். என்ன கொஞ்சம் உங்கள் மூளையை உபயோகித்திருந்தால் இப்படி நீ ‘மமு’ வா இருந்திருக்க வேண்டியதில்லை.”
“நானும் பார்த்துக்கிட்டிருக்கேன். நீங்க என்னை மமு மமுன்னு சொல்றீங்களே? அப்படி என்னதான் எனக்குப் பெயர் வைத்திருக்கிருக்கீங்க?”
அவன் அவள் காதில் முணுமுணுத்தான்.
“என்னது மக்கு முண்டம
...
This story is now available on Chillzee KiMo.
...
்டிற்கு வந்தனர்.
அன்று தன் தாயிடம் சொல்லி தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க நாள் பார்க்கச் சொல்ல எண்ணினான் கருப்பையா.
அப்போது கௌதம் வந்தான்.
இப்போதெல்லாம் அவன் அடிக்கடி வருவதில்லை.
“வாடாப்பா. இப்பதான் எங்களையெல்லாம் உனக்கு கண்ணு தெரிஞ்சுதா?”
வடிவு வரவேற்றாள்.