தரணுக்கு அதற்குமேல் பேச்சே எழவில்லை..!! குழந்தைத்தனம் மாறா அந்தக் குழந்தையின் முகத்திலேயே அவனது பார்வை நிலைத்திருந்தது..!!
“எப்படி இப்படி இருக்க முடிகிறது இவனால்.. ம்ஹூம்.. இவளால்..?? நானாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்..”, சுயப்பரிசோதனை..!!
“இரத்தம் ரொம்ப வருது பாருண்ணா.. ஆஸ்பத்திரி போகலாம்..”, தரணின் உடலில் வழிந்துகொண்டிருந்த குருதியைத் தனது விரல்களால் அடைத்துப்பிடிக்க முயன்றபடி பாவமாய் நிஷா சொல்லிட..
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“நான் அண்ணா எல்லாம் இல்லை.. அக்கா உனக்கு..”, என்ன தோன்றியதோ பட்டென சொல்லியிருந்தான் தரண்..!!
“அ..ப்போ.. அ..ப்போ.. நீங்களும் என்னை மாதிரிதானா..ண்ணா..?? க்கா..??”, கொஞ்சம் மகிழ்வாகவே.. தன்னைப்போல் மற்றவரைப் பார்க்கும்பொழுது தோன்றும் ஒருவித மகிழ்ச்சி அது.. தனக்கென்று ஒரு கம்பெனி கிடைத்துவிட்டதுபோல் நினைப்பு..!!
“உன்னை மாதிரியேதான்..”, அழுத்தாம உரைத்த தரண், “நான் தரண்யன்..”, என்றிருந்தான்..
“அது பையன் பேராச்சே..??”, ஒரு சகஜபாவம் வந்திருந்தது நிஷாவினிடத்தில்..
“அப்படியா..?? மாத்திடலாம் அதை அப்போ..”, என்ற தரண், “உனக்கு யார் பேர் வெச்சது..??”, இலகுவாகவே..
“நானே விச்சுக்கிட்டேன்.. நல்லா இருக்கா..??”, ஆர்வமாக..
“ஹ்ம்.. சூப்பரா இருக்கு.. எனக்கும் நீயே பேர் வெச்சுவிடு..”
நெற்றிப்பொட்டைத் தட்டியபடி யோசித்த நிஷாவிற்கு மனதில் தோன்றியது தா..ரி..கை.. செந்தா..ரிகை..தான்..!!
காலையில் ஒரு குழந்தை சொல்லி கேட்டது..!! அப்படியே பதிந்திருந்தது நிஷார்த்திக்காவின் மனதில்..!!
“செ..ந்..தா..ரி..கை..”, ஒவ்வொரு எழுத்தையும் அழுத்தி உச்சரித்துப் பார்த்த தரணுக்கு அந்தப் பெயரில் அப்படியொரு பிடித்தம்..!!
அழகாகவே புன்னகை புரிந்திரிந்தாள் பெண்ணாகியவள்..!!
வணக்கம் தோழமைகளே..!!
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!
இரண்டு வாரங்கள் பரிட்சை கொஞ்சம் ஸ்ட்ரெஸ் எனக் கடந்துவிட்டதால்.. பதிவுகளைப் பதிவேற்ற முடியவில்லை.. மன்னித்துவிடுங்கள்..!!
கடந்துபோன வருடத்தில் நடந்து முடிந்த இனியவகளையும் படிப்பினைகளையும் சுமந்துகொண்டு அடுத்த வருடத்தில் சந்திக்கலாம்..!!
நன்றி..!!
உருவெடுப்பாள்..
{kunena_discuss:1168}