(Reading time: 5 - 10 minutes)

அவன் அறைக் கதவு தட்டப்பட்டது. மிகவும் மெல்லியதான ஒசை. ஆகாஷ் கதவு இடுக்கின் வழியே பார்த்தான். அங்கு யாரையும் காணவில்லை “உனக்கு கரெக்டா தெரியிர மாதிரியா நிப்பாங்க” என தன்னையே திட்டிக் கொண்டான். திறக்க முற்பட்டப் பொழுது மீண்டும் கதவு தட்டப்ட்டது.

மெல்ல திறக்க தாடி தாத்தா நின்றிருந்தார். “இவர் ஏன் இங்க?“ என்ற கேள்விக் கணை புருவ முடிச்சுகளாக மாறின. தாத்தா அவனை முறைத்தபடி சிரித்தார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“கேதாரநாத் பக்கம் உனக்கு உதவி கிடைக்கும் . . முட்டாள் எங்கயோ தேடாதே . . ” எனச் சொல்லி செல்ல முயன்றார்.

“நீங்க யாரு?” என அவர் முன் போய் போகவிடாமல் நின்றான். அவர் கூறிய “முட்டாள்” என்ற சொல் வேறு அவன் கோபத்தை கிளப்பியது

தாத்தாவிடமிருந்து “ஜேம்ஸ் பாண்ட்” என கேலி தொனியில் பதில் வந்தது. அவரும் அவன் கைக்கு சிக்காமல் மறைந்துவிட்டார்.

தாத்தாவின் குரலும் . . . அவர் அருகில் நின்றதால் அவர் மேலிருந்து வீசிய வாசமும் ஆகாஷ் உதடு “சாரு” என்ற மந்திர பெயரை உச்சரித்தது.

தொடரும் . .

Episode # 17

Episode # 19

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.