மீண்டும் இருட்டை கண்டவளுக்கு பயம் தொற்றிக்கொள்ள அவன் அருகில் வந்து படுத்ததும் அவன் மார்பில் சென்று புதைந்து கொண்டாள். அவள் தன்னை சமாதானம் செய்ய தான் இருக்க பற்றிக்கொண்டாள் என்று நினைத்தவன் "நான் எத பத்தியும் யோசிக்கல டா நீ என்ன பத்தி நெனைச்சி பயப்படாத" என்று கூறி விட்டு அவளை இருக்க அணைத்து கொண்டு உறங்கி போனான். ஏற்கனவே கவலையாக இருக்கும் அவனிடம் தன் கனவை பற்றி கூற அவளது மனம் இடம் கொடுக்கவில்லை அதனால் அதை தன்னுள்ளே போட்டு புதைத்து கொண்டாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
"ஹோய் அம்மு... என்ன ஸ்பெஷல் இன்னைக்கு?" என்று கிட்சேன் இல் சமைத்து கொண்டிருந்த சீதாவை பின்னால் இருந்து அணைத்தான் ராம்.
"ராம் நா இன்னைக்கி" என்று ஆரம்பித்து தான் என்னென்ன சமைத்தாலோ என்னென்ன சமையல் விடியோவை அலசினாலோ அவை அனைத்தையும் அவனிடம் ஆர்வமாய் ஒப்பித்துக்கொண்டிருந்தாள். ஆனால் ராமோ அவள் கூறுவதை காதிலே ஏற்றிக்கொள்ளவில்லை. அவளின் கண்களில் இருக்கும் சந்தோஷத்தையும் அவளின் அழகுலேயும் மூழ்கிவிட்டுருந்தான். அவள் கூறி முடித்ததும் அவளின் மூக்கோடு தன் மூக்கை உரசியவன் "பசிக்குதுடி" என்றான் பாவமாக முகத்தை வைத்து கொண்டு.
"அச்சோ... முடிஞ்சிடுச்சி ராம் சப்புடலாம்" என்றாள்.
அவளோடு சேர்ந்து உணவை ஹாலில் அடுக்கினான். அனைவரும் ஒன்றாக உணவருந்திவிட்டு படுக்க சென்றனர்.
அவர்களின் அறையினுள் நுழைந்த மனைவியை அள்ளி அணைத்தான் ராம்.
"இன்னைக்கு சமையல் சூப்பர் டா" என்றவன் அவளின் இதழில் இதழ் பதித்தான்.
புதுமண தம்பதியர்க்கே உரித்தான வகையில் அன்றிரவை கழித்தனர்.
இரண்டு ஜோடிகளும் வெவ்வேறு உணர்ச்சியில் மூழ்கி இருக்கின்றனர் இனி நடக்கவிருக்கும் விபரீதம் தெரியாமல்.
தொடரும்
{kunena_discuss:1228}