(Reading time: 9 - 17 minutes)

"என்ன கரெக்ட்?... இதோ பாரு சீதா இத பத்தி நாம நெறய பேசிட்டோம். நமக்கு கல்யாணம் ஆகி இன்னும் முழுசா ஒரு வருஷம் கூட ஆகல. அதுக்குள்ள இன்னும் கொழந்த இல்லனு நீ இப்டி அழுதா எப்படி டா?"

"ஆனா எட்டு மாசம் ஆகிடுச்சே. எதாவது எனக்கு கொர இருக்குமோனு பயமா இருக்கு ராம்."

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"லூசு மாதிரி பேசாத சீதா. கொர என்கிட்ட கூட இருக்கலாமே?. இதெல்லாம் யோசிக்கற அளவுக்கு ஒன்னும் நமக்கு வயசு ஆகிடல. எத்தனையோ பேர்க்கு கல்யாணம் ஆகி நெறய வருஷம் கழிச்சி கொழந்த பொறந்து இருக்கு. நீ தேவ இல்லாம நெறய யோசிக்கற. நமக்கு சீக்கிரமே பாப்பா வரும் சரியா?"

"..."

"டேய்... அம்மு... சிரி டா. உனக்கு ஒன்னு தெரியுமா?. முயற்சியே பண்ணாம வெற்றி எப்படி கிடைக்கும்?. நீ இப்டி மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருந்தா நாம எப்படி முயற்சி பண்றது?" என்று அவளை பார்த்து கண்ணாடிதான். அவனின் வார்த்தையில் உள்ள அர்த்தத்தை புரிந்துகொண்டவள் முகம் சிவந்து அவனை இருக்க அணைத்து கொண்டாள்.

கண்ணாடி நீ கண்ஜாடை நான்

என் வீடு நீ உன் ஜன்னல் நான்

என் தேடல் நீ உன் தேவை நான்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

என் பாடல் நீ உன் வார்த்தை நான்

என் பாதி நீ உன் பாதி நான்

என் ஜீவன் நீ உன் தேகம் நான்

என் கண்கள் நீ உன் வண்ணம் நான்

என் உள்ளம் நீ உன் எண்ணம்  நான்....

சாரி நண்பர்களே!!! இந்த வார எபிசொட் என்னால சரியான நேரத்துல கொடுக்க முடியவில்லை.

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1228}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.