(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 03 - குருராஜன்

Enakena yerkanave piranthavan ivano

நிலா, ரகு இருவரும் ஒரே நேரத்தில் “முடிவு பண்ணிட்டேன், எனக்கு லவ் மேரேஜ் தான், அத strongஆ வீட்டில் சொல்ல போறேன்” என்றார்கள்.

(நிலா வீட்டில்)

மாலை வீட்டில் நுழைந்தாள் நிலா. சாதாரணமாகச் சிறிது நேரம் பேசிவிட்டு, தன் அறைக்குச் சென்று முகம் கழுவி வேறு உடை மாற்றிக் கொண்டு, தனது முடிவைத் தெரிவித்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு மீண்டும் hallக்கு வந்தாள்

“அப்பா கொஞ்சம் உங்க கூட பேசனும்” என்று கூறி கொண்டே அவர் பக்கத்தில் அமர்ந்தாள்.

“சொல்லு மா நிலா” என்று தான் laptopல் பார்த்துக் கொண்டிருந்த வேளையை நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தார் சங்கர்.

“ஸாரி பா. காலையில் நீங்க பேசிட்டு இருக்கும் போது நான் பாதியில் போனதுக்கு” என்றாள் நிலா.

“ச்ச அதில் என்ன டா இருக்கு. எதுக்கு ஸாரி எல்லாம்” என்று பதில் அளித்தார் சங்கர்.

“அம்மா, நீங்களும் இங்க வாங்க” என்று தன் தாயையும் அழைத்து பக்கத்தில் அமர வைத்தாள் நிலா.

“அப்பா, பிளிஸ் பா, எனக்கு இப்போ இந்தக் கல்யாணம் வேண்டாம் பா” என்றாள் நிலா.

சங்கரும், சிவகாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு நிலாவிடம் இருந்து வரும் அந்தப் பதில் புதிதல்ல. இருவரும் அமைதியாக இருந்தனர். அவர்களின் அமைதிக்கு அர்த்தம் அவளுக்கும் தெரியும்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அப்பா என்ன தப்பா நினைக்காதீங்க. என்னோட lifeல எல்லா கட்ட முக்கியமான முடிவுகளையும் நானே எடுக்கிறதுக்கு நீங்க முழு சுதந்திரம் குடுத்திங்க. என்னோட கல்யாணம் என் lifeல ரொம்ப பெரிய விஷயம். அது எனக்குப் பிடித்த மாதிரி அமையலனா இதுவரைக்கும் நீங்க கொடுத்த சுதந்திரத்திற்கு எல்லாம் அர்த்தம் இல்லாமல் போயிடும். So இந்த மேரேஜ் விஷயத்தில் கடைசி முறையா எனக்கு சப்போர்ட் பண்ணுங்க பா please“ என்று தன் பக்க நியாயத்தை கெஞ்சலுடன் வெளிப் படுத்தினாள் நிலா.

“நீ சொல்றது எல்லாம் சரிதான் நிலா. நாங்க முதல் தடவை உன் கல்யாணம் பற்றிப் பேசும் போது, காதல் திருமணம் தான் செய்ய போறேனு சொன்ன. அதற்கு நீ சொன்ன காரணங்களும், உன் மேலே இருக்கும் நம்பிக்கையிலும் நாங்க அதற்கு மறுப்பு சொல்லல. சரிதானே” என்றார் சங்கர்.

ஆம் என்பது போல் தலை ஆட்டினாள் நிலா.

“உனக்கு பிடிச்சிருந்தா, நல்ல பையனா இருந்த மட்டும் போது நாங்க உன் திருமணத்திற்கு சம்மதம் சொல்றோம் நு சொன்னோம். அதை நாங்க சொல்லியும் இப்போ 3 வருடம் ஆக போவுது. ஏற்கனவே நம்ம சொந்தகாரங்க தெரிஞ்சவங்கனு எல்லாரும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல நு கேட்டுக்கிட்டு இருக்காங்க. அவங்கள விடு, உனக்கு ஒரு கல்யாணம் செய்து பார்க்கனும், பேரக் குழந்தை கூட விளையாடனு நு எங்களுக்கு ஆசை இருக்காதா. எங்க நிலைமையில் இருந்து நீ யோசித்து பாருமா” என்றார் சங்கர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கண்ணம்மாவின் " உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அப்பா நீங்கச் சொன்னது எல்லாமே உண்மைதான். எனக்கான முழு சுதந்திரத்தை கொடுத்துத்தான் வளர்த்து இருக்கீங்க. அதே போல் உங்க ஆசையும் நியாயமானதுதான். ஆனால் முன் பின் தெரியாத ஒருவரைக் கல்யாணம் செஞ்சிக்க எனக்கு விருப்பம் இல்ல. So கொஞ்சம் டைம் கொடுங்க பா பிளிஸ்” என்றாள் நிலா.

“நிலா நீ ஒண்ணும் சின்ன குழந்தை இல்ல. நாங்க எதுக்கு உன் திருமணத்தை பற்றி விடமா கேட்கிறோம் நு உனக்கே நல்லா தெரியும். இருந்தாலும் இது உன்னுடைய வாழ்க்கை. உன் சம்மதம் இல்லாமல் நாங்க எதுவும் செய்ய மாட்டோம். நீ இப்போ வேண்டாம் நு சொல்ற. சரி அதுக்கு நாங்க சம்மதிக்கிறோம்” என்று அவர் நிருத்த, அவரை அதிர்ச்சியோடு பார்த்தார் சிவகாமி. நிலாவுக்கோ நிம்மதி. ஆனால் சங்கர் இன்னுமும் முடிக்க வில்லை.

“நீ time கேட்ட நாங்க அதுக்கு ok சொல்லிட்டோம். ஆனால் இப்போ அந்த time எவ்வளவு நாள் நு நீயே சொல்லு. நீ சொல்ற time குல்ல உனக்குப் பிடித்த, ஒரு நல்ல பையனா தேர்ந்து எடுத்து எங்க கிட்டச் சொல்லு. அப்படி இல்லனா அந்த time முடியும் போது நாங்க சொல்ற பையனை நீ எந்த மறுப்பும் சொல்லாமல் கல்யாணம் பண்ணிக்கனும்” என்று கூறி முடித்து நிலாவைப் பார்த்தார்.

நிலா இந்த twistஐ  எதிர் பார்க்கல. “அப்பா என்ன சொல்றீங்க” என்று அதிர்ச்சியாகக் கேட்டால் நிலா.

“ஆமாம் மா, உனக்கு இப்போ இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை, time கேட்டது correct தான். உனக்கு நாங்க time தறோம். ஆனால் இதுதான் கடைசி தடவை. எங்களுக்கும் உன் மேலே அக்கறை இருக்கு. நீ கேக்குற இந்த timeல நாங்களும் உனக்கு பொருத்தமான பையனா தேடுறோம். நீ தேடிட்டு இருக்கிற பையன் உன் கண்ணில் படாமல் எங்க கண்ணில் படலாம் இல்லையா. அதனால நீ இப்போ ஒரு time line சொல்லு, அதை நாங்க தறோம். அது முடியும் போது உனக்குக் கல்யாண ஏற்பாடு தெடங்கிருக்கனும். அது நீ பார்த்த பையனா இருந்தாலும் சரி இல்ல நாங்க பார்த்த பையனா இருந்தாலும் சரி. Choice is yours” என்று கூறி முடித்தார் சங்கர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.