ஆனால் வக்கீல் வந்த உடன் அவனுக்குப் புரிந்துவிட்டது.
அவன் கௌதமை முறைத்தான்.
ஆனால் கௌதம் அவனைக் கண்டுகொள்ளவில்லை.
"இப்ப எதுக்காக வக்கீலை அழைச்சுட்டு வந்திருக்கே?"
"சொத்துப் பிரிவினையைப் பத்திப் பேசத்தான்."
"அதற்கு சம்பந்தமேயில்லாத நீ எதுக்கு இங்கே இருக்கனும்?"
"ஏன்னா என்னை சாட்சியா வைத்துத்தான் அப்பா அந்த உயிலை எழுதினார்."
"ஓ. ஏற்கனவே அந்த மனுசன் உயிலை எழுதி வைத்துவிட்டுத்தான் போனாரா? அதை முன்னமே சொல்லித் தொலைய வேண்டியதுதானே?"
அவன் கவிதாவையும், பிரபுவையும் கவிதாவையும் இங்கே ஏன் வந்தீர்கள் என்பது மாதிரி பார்த்தான்.
"நீ ஏன் வந்திருக்கே? உனக்குச் செய்ய வேண்டியதைத்தான் செஞ்சு முடிச்சாச்சே."
அதைக் கேட்டதும் கவிதாவுக்கு கோபம் வந்தது. அவனிடம் பி
...
This story is now available on Chillzee KiMo.
...
தும்பான்னுதான்டா சொன்னான். ஆனால் இப்படி அல்பாசுல போய் சேர்ந்துட்டானே? அவன் இப்ப இருந்திருந்தால் இந்தச் சொத்தை எல்லாம் தூசி மாதிரி வேண்டாம்னு உதறித்தள்ளிவிட்டுட்டுப் போயிருப்பான்டா. ஆனால் இப்ப அவன் இல்லையே. அவனோட பொண்டாட்டி குழந்தைகளை யார் பார்க்கிறது?"
"அதுக்குத்தான் நீயிருக்கியேடா?"