(Reading time: 17 - 33 minutes)

"ஆமா சந்தோஷமா தான் வச்சிருக்கார்.எப்பவும் என்னை பிரியருது கிடையாது.அன்பா இருக்கார்...எப்பவும் உறுதுணையா இருக்காரு...."

ஒவ்வோன்றாக நான கூற "ம்ம்ம்" என்று என்னை நோக்கி நெருங்கி கொண்டிருந்தான்என் விளையாட்டு புரிந்து அவன் விளையாட்டு ஆரம்பித்து விடுமோ என்று அஞ்சி பின்னோக்கி நகர்நதேன்.இனி நகர இடமில்லாமல் சுவற்றில் முட்டி நின்றேன்.அவன் மேலும் முன்னேறி என் அருகில் மிக அருகில் நின்றான்.

"அவரை பார்த்து ஒரு விஷயம் கேட்கனுமே"

"என்ன"

"இத்தனை அழகான என் தேவதையை இப்படி மொட்டை மாடியில் உலாவ விடலாமா மனசில் வச்சி பூட்ட வேண்டாமா என்று"

"........!?!?"

"எனக்காகவே என்னை மட்டுமே சுமந்து காத்திருக்கும் இந்த கண்ணழகி கண்ணும் இதழும் மனசும் அவளுடையவனான எனக்கே சொந்தம்னு சொல்லனும்"

அவன் ஸ்வாசம் என் நெற்றி சுட்டது. இத்தனை அருகில் அவன்.ஏக்கத்துடன் நான்.எப்படி இடைவெளி நீளும்.எங்கள் மனதின் இடைவெளியும் உடலின் இடைவெளியும் இல்லாமல் போனது.ஆரத்தழுவி கொண்டோம முத்தத்தால் நனைந்து போனோம்.கண்ணீரை வார்த்தையாய் பறிமாறிக்கொண்டோம்.வார்த்தை எல்லாம் வற்றி போய் என் ஆசை வலி,ஏக்கம்,பயம் எல்லாம் விம்மலும் அழுகையுமாய் அவனிடம் கூறினேன்.மருந்தாய் ஆறுதலாய் அவன் தழுவலும்ம் முத்தமும்.கண்ணீரோடு கவலைகளும் தீர்ந்தது."கயல் உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன்.சாரி டீ.நீ என் வரம் கயல்.என் பொக்கிஷம்.ஐ லவ் யூ"

"இந்த நொடி இந்த நிமிடம் இந்த அணைப்பு இது போதும் எந்த வலியும் இல்லை வேதனையும் இல்லை.நான் மட்டுமா நீங்களும் தானே இதே வேதனை அனுபவிச்சிருப்பீங்க."

"கண்ணழகி உன்னை இனி பிரியவே மாட்டேன்"

எத்தனை நேரம் இந்த தழுவல்கள் ஆறுதல்கள் தெரியவில்லை. இந்த மொத்தப்ரபஞ்சத்தில் நாங்க இருவர் மட்டுமே இருப்பதாய் உணர்ந்தோம்

"நான் உங்களுக்காக காத்திருப்பேன்னு நம்பனீங்களா...ஏன் மிஸஸ் கயல் னு கூப்பிட்டீங்க"

"தெரியும் கயல் உன் காதல அவ்வளவு ஆழமானது.நான் சொல்ல வந்ததது மிஸஸ்.கயல்விழி அறிவழகன்"

"உங்களை பற்றி ஒரு விவரமும் இல்லாமல் தவிச்சிட்டேன்.உண்மையில் நீங்க மாறிட்டீங்கன்னு பயம் கூட வந்தது"

"என் உயிர் இங்க எனக்காக தவம் இருக்க நான் எப்படி மாறுவேன் கயல்.உண்மையில் நம் பிரிவில் உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு தெரியும் கயல்.தெரிஞ்சிகிட்டு தான் இருந்தேன்.நீ என்னை பற்றி ஒன்றும் தெரியாம என்னை நம்பி இருந்த கயல்.ஆனா நான் உன்னை பற்றி எல்லாம் தெரிஞ்சிகிட்டிருந்தேன்.உன் அன்பின் ஆழம் என்னை புரட்டி போடுது கயல்.உன்னை இழக்க முடியுமா"அவன் கண் பனித்தது இறுக்கி அனைத்தான்.அவன் அனைப்பில் அவன் அன்பில் நெகிழ்ந்து போனேன்.

"அறிவு இனி காக்க முடியாது உங்களோட என் ஒவ்வொரு மணித்துளியும் வாழனும் உங்க மனைவியா"

"அதெப்படி உனக்கு தான் உங்கம்மா ஒரு பையன பார்ககறாங்களே.அந்தம்மா கூட அவங்க முதல் பையனுக்கு கேட்டங்களே...எனக்கென்னவோ அது சரியா வரும்னு தோணுது..சரி சொல்லிடு கயல்"

"விளையாடாதீங்க.அவங்களுக்கு வேற வேலை இல்லை"

"இல்லம்மா நிஜமா தான்.அந்த பையன் கூட பாவமாயிருக்கான்.நீ சரி சொல்லிடு....இங்க வேற நிறைய பொண்ணுங்க வந்திருக்கு...பார்க்க குளிர்ச்சியா யூத்தா"

"என்ன....என்ன டா பாவம்...இங்கே ஏதாவது பொண்ணு பார்த்து வச்சிருக்கியா..."

"என்ன மரியாதை தேயுது.பரவாயில்லை... நீ அறிவாளி...டக்கென்று புடிச்சிட் பாயிண்ட...உனக்கு வேற வயசாச்சு கயல்..இங்க ஏதாவது சின்ன பொண்ணா பார்த்து முடிக்கலாம்னு...."

ஆத்திரம் தலை ஏறியது.அவனை சரமாரியாக தாக்கினேன்.

"ஆங் வயசாச்சா....நான் கிழவின்னா நீங்க கிழவன்...சின்ன பொண்ணு வேணுமா உனக்கு...அதுக்கு நான் எவனையாவது கட்டிகனுமா என்னடா உன் நினைப்பு"

"ஏய் நிறுத்து டீ இத்தனை உதை தாங்க மாட்டேன் டீ சின்ன புள்ள டீ நான்....இரு டீ"

அடித்த என் கைகளை இரும்பு பிடியாய் பிடித்தான்

"அந்தம்மா எங்க அம்மா டீ அந்தபாவப்பட்ட பையன் நான் தான் போதுமா"

கோபமெல்லாம் வெட்கமாய்மாற அவன் மார்பில் முகம் புதைத்தேன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"என்ன கயல் வெட்கம்....உனக்கு சம்மதமா?"

"ம்ம்ம்"

"பதில் சரியா சொல்லு டீ"

"கேள்வி சரியா இருந்தா பதிலும் சயரியா வரும்"

என் கழுத்தில் கைபதித்து என்  முகம் ஏந்தி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.