மாலை கௌவுதமின் வீட்டில்..
முரளி மற்றும் அசோக் இருவரது செல்லிற்கும் டயல் செய்து நாட் ரீச்சபில் என்று வந்ததும் சோபாவிலிருந்து எழப்பார்த்த கௌவுதம் தடுமாறி மறுபடியும் சோபாவிலேயே அமர்ந்தான். தலை வலித்தது. இரண்டு கைகளாலும் தலையை படித்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தான். வயிற்றைப் புரட்டிக்கொண்டு வாந்தி வந்தது. தட்டுத்தடுமாறி எழுந்து பாத்ரும் சென்று வாந்தி எடுத்தான். பின்பு முகத்தை நன்றாக தண்ணீர் விட்டு அலம்பினான். அதற்குப் பிறகுதான் நன்றாக நிற்க முடிந்தது. தெளிவாய் சிந்திக்க முடிந்தது.
'முரளி அசோக் இருவரையும் தொடர்புகொள்ள முடியவில்லையே இப்போது என்ன செய்வது. சரி நாமே நேரில் செல்வோம்' என தீர்மானித்து வெளியே வந்தான்.
இங்கே பிரணவ்வி
...
This story is now available on Chillzee KiMo.
...
திற்கு சரி என்று சொன்னோம் என்று அவனுக்கு அதுவரை சத்தியமாக புரியவில்லை. வெண்ணிலா கூறிய செய்தி அவனுக்கு ஏமாற்றத்திற்கு பதிலாக நிம்மதியைத்தான் கொடுத்தது.
இது எப்படி வெண்ணிலாவிற்கு தெரிந்தது என யோசித்த கௌவுதம் திரும்பி வெண்ணிலாவின் அருகில் வந்து "உனக்கு எப்படித் தெரியும்" என்றான்.