அவள் எதுவும் பேசவில்லை அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தாள். அவள் எதுவும் பேசாமல் நிற்பதைப் பார்த்து எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தான். பின்பு அவனுக்கு சட்டென்று நினைவு வந்தது 'தான் முரளியிடம் போனில் போசும்போது வாசலில் நினழாடியாதே என்று' அப்போது போன் பேசும் அவசரத்தில் அவன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது புரிந்தது.
அவன் அவள் அருகில் வந்து "அப்போ ஒட்டுக்கேட்டாயா" என்றான் கோபமாய்.
வெண்ணிலாவும் பதிலுக்கு அவனைவிட கோபமாய் "ஆமா ஒட்டுக்கேட்டேன். அப்படித்தான் உங்களோட இந்த கேவலமான திட்டத்த தெரிஞ்சுக்க முடிஞ்சது. அத பிரணவ் அண்ணாகிட்ட சொல்லி மித்ரா அக்காவ அந்த பொறுக்கீங்க கிட்ட இருந்து காப்பாத்த முடிஞ்சது" என்றாள்.
அவள் கூறியது கௌவுதமின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் இங்க இருக்கனுமா வேண்டாமான்னு நல்லா யோசிச்சு காலையில உங்க முடிவ சொல்லுங்க. நான் வர்றேன் " என்று முடிவாய் கூறிவிட்டு வாசல் வரை சென்றவள் திரும்பி கௌவுதமைப் பார்த்து "அன்பால அடைய முடியாத எதையும் வேறு எதனாலையும் எப்பவும் அடைய முடியாது கௌவுதம்" என்றுவிட்டு திரும்பிப் பாராமல் சென்றுவிட்டாள்.