அப்போதுதான் வெளியில் சென்றிருந்த கோபி அண்ணா திரும்பி வந்திருந்தார். அவரிடம் நடந்ததை பங்களாவின் முன் நின்றுகொண்டிருந்த வேலையாட்கள் கூறிக்கொண்டிருந்தனர். பங்களாவிலிருந்து வெளியே வந்த வெண்ணிலா அவர்களை பார்த்ததும் ஒன்றுமே நடக்காததுபோல் இயல்பான முகபாவத்துடன் வந்து "கோபி அண்ணா வந்துட்டீங்களா. சரி சீக்கிரமா போய் இரவுக்கான சமையல் வேலைய ஆரம்பிச்சுடுங்க" என்றுவிட்டு மற்றவர்களைப் பார்த்து "என்ன எல்லாரும் இங்க நின்னுட்டிருக்கீங்க யாருக்கும் எந்த வேலையும் இல்லையா" என்றாள்.
அவள் சோகமாக வெளியே வருவாள் ஆறுதல்கூறும் சாக்கில் என்ன சண்டை என்று விசாரிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமாய் போய்விட்டது. அனைவரும் தங்கள் வேலைகளைப் பார்க்க கலைந்து சென்றனர்.
வெண்ணிலா அவுட்கவுஸிற்கு வந்து சோபாவில் அமர
...
This story is now available on Chillzee KiMo.
...
றம்போல் மாற்றி ஹாஸ்டலுக்கு வெகு அருகில் கௌவுதமினது காரையும் அசோக்கையும் நிற்கவைத்திருந்தான். அவன் சற்று தள்ளி மறைவான இடத்தில் நன்றுகொண்டான்.
மித்ரா வெளியே அவளது ஸ்கூட்டியில் வந்ததும் அசோக் காரை ஸ்டாட் செய்து கார் சிறிது தூரம் சென்றதும் முரளி ஏறிக்கொள்வதாக ஏற்பாடு செய்திருந்தனர்.