அவளுக்கும் மனது உறுத்தலாய் இருந்தது.
"ஆதி. அவங்க வீட்டுப் போன் நம்பர் தெரியுமா? போடு நான் பேசறேன்."
அவன் மனதுக்குள் குதூகலித்தான்.
அம்மாவிற்குப் பிடிக்கவில்லை என்றால் இந்தத் திருமணம் நடக்காது.
மகிழ்ச்சியுடன் மகாலெட்சுமியின் அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டான்.
"ஹலோ."
மறுமுனையில் மகாலெட்சுமியின் இனிய குரல் கேட்டது. அவன் எரிச்சலானான்.
"நான் ஆதித்யா பேசறேன். எங்கம்மா உன்னோட அம்மாக்கிட்ட பேசனுமாம்."
மறுமுனையில் மகாலெட்சுமி தன் தாயை அழைப்பது கேட்டது.
அவனும் தன் தாயிடம் அலைபேசியைக் கொடுத்தான்.
"ஹலோ."
சிவரஞ்சனி பேசினாள்.
"என்னங்க நீங்க. எங்களுக்கு இருக்கிறது ஒரே பையன். அவன் வாழ்க்கையில் நடக்கிற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் என்னோட சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ின் மனம் தெரியும். அதனால் மகிழ்ச்சியோடே வலம் வந்தாள்.
சரவணன் வெளி வேலைகளைப் பார்த்துக்கொள்ள மேனகா சிவரஞ்சனிக்குத் துணையாக இருந்தாள்.
அவர்கள் வீட்டில் அனைவரும் வந்துவிட்டனர்.
மகாலெட்சுமி எந்தவித அலங்காரமும் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்தாள். சுடிதார் அணிந்திருந்தாள்.