சந்தானம் மற்றும் சிவகாமியை நிற்கவைத்து அவர்கள் பாதம் பணிந்தாள் மகாலெட்சுமி.
அதைக் கண்டதும் மிகவும் பெருமைப்பட்டாள் சிவகாமி. மரியாதை தெரிந்த பெண்.
அவர்கள் சம்மதம் தெரிந்த பிறகு ஆதித்யா எதுவும் சொல்லவில்லை.
"நான் மாப்பிள்ளைக்கிட்ட கொஞ்சம் பேசனும்."
சொன்னவளைக் கண்டதும் அனைவரும் திகைத்தனர்.
இது மாதிரி பெண் பார்க்கும் சடங்குகளில் பெரும்பாலும் பெண்தான் மாப்பிள்ளையிடம் கொஞ்சம் பேசனும் என்று சொல்வாள். அதற்கு எதிர்மாறாக இங்கே பெண்ணின் தாய் சொன்னாள்.
ஆம். சிவரஞ்சனிதான் ஆதித்யாவிடம் பேச வேண்டும் என்று சொன்னாள்.
அவள் முகத்தில் இருந்த கலக்கம் கண்ட சந்தானம் உடனே தனது சம்மதத்தைக் கூறினார்.
"போய் பேசும்மா. போய் உன் சந்தேகத்தை தீர்த்துக்கோ. நான் உன்னை என் சகோதரிபோலத்தான
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்பை தான்தான் அதிகம் அனுபவித்திருக்கிறோம். தன் தம்பிக்கு அத்தகைய சந்தோசம் கிடைக்கவில்லை என்று வருத்தம் அதிகம். கருப்பையா இறந்த போது அவன் விவரம் தெரியாத பையன். அதனாலேயே தம்பி மீது அவளும் அதிகம் பாசம் காட்டினாள்.
அதற்கேற்றாற் போல் ஆரவும் தன் தமக்கையின் மீது மிகுந்த அன்புடன் இருந்தான்.