(Reading time: 16 - 32 minutes)

வந்தவர்களை வரவேற்கும் விதமாக கைகளைக் குவித்து வணக்கம் தெரிவித்தாள்.

எளிமையாக இருந்தாலும் அவளது அழகு மிளிர்ந்தது.

அவர்கள் வீட்டிற்கு வரும் வரையில் மகனுக்குப் பெண்ணைப் பிடிக்கவில்லையோ? அதனால்தான் ஏதேதோ சொல்லி தன் மனதைக் கலைக்கப் பார்க்கிறானோ? என்று எண்ணியிருந்தாள்.

ஆனால் மகாலெட்சுமியை நேரில் கண்ட பிறகு இந்தப் பொண்ணையா மகனுக்குப் பிடிக்கவில்லை என்று ஆச்சர்யப்பட்டாள்.

வீட்டுக்குள் நுழையும்போது ஆதித்யா தன் தாயின் காதில் கிசுகிசுத்தான்.

"பார்த்தியாம்மா இவளோடதிமிரை. நாம இன்னிக்கு அவளைப் பார்க்க வரப்போறோம்னு தெரியும். இருந்தும் சுடிதாரில் நிற்கிறாள் பார்த்தியா? ஒரு சாதாரண சேலை கூட கட்டலை பாரேன்."

சிவகாமிக்கும் அப்படித்தான் தோன்றியது.

அன்று வந்திருந்த விருந்தினர்களுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்சுமி சாப்பிட்டுவிட்டு சேலை மாற்றி வந்தாள்.

"வாம்மா. வந்து உட்காரு."

சிவகாமி பாசத்துடன் அவளை தன்னருகில் அமர்த்திக் கொண்டாள். அப்படியே தாங்கள் வாங்கி வந்திருந்த பூவை அவள் தலையில் வைத்துவிட்டாள்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவரஞ்சனி வீட்டாருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.