இந்த இடத்துலே காமாட்சியை பற்றி ஒரு சிறு intro காமாட்சி பௌவ்வோட தாத்தா வீட்டு அதாவது மிஸ்டர் ஈஸ்வரன் வீட்டு பக்கத்துலே இருக்கிற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணுங்க. அந்த வீடு ஓரளவுக்கு செல்வநிலை படைத்ததுதான் ஆனால் காமாட்சி போலியோவால் பாதிக்கப்பட்ட காரணத்தால் அனைவராலும் ஒதுக்கப்பட்டு ஒரு பாவப்பட்ட பிறவியாகவே நடத்தினர் . சின்ன வயசுலே அவங்க பாட்டி வீட்டுக்கு போகும்போதெல்லாம் காமாட்சியை வாசல்லில் பாக்குறது வழக்கம்தான். அவளுடைய ஆறு வயசுல காமாட்சியை முதன் முறையாக பார்த்தால் என்று நினைக்கிறேன் அப்போது அவளுக்கு சுமார் 12வயது இருக்கலாம் இவள் அவளைக் கடந்த செல்லும்் நேரங்கள் ஒரு சாதாரண சிரிப்பை சிந்த அது அவளுக்கு பெரும் வரமாக கருதப்பட்டது. தினமும் பார்க்கும் ஒருவரை நாம் பார்த்தாள் சிந்தும் புன்னகை நம்மால் தடுக்க முடியாதவை அது போல் இவளை கடந்து செல்லும் போதெல்லாம் போவ்வும் ஒரு சின்ன புன்னகையை சிந்திச் செல்வது வழக்கமானது அவள் படிப்பதற்காக தன் பெற்றோருடன் வெளிநாடு சென்றிருந்த காலத்தில் காமாட்சியின் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டது. அவள் பெற்றோர்களே பெற்ற மகளை பாரம் என்று கருதி ஒரு ஆசிரமத்தில் சேர்த்து பல இன்னல்களுக்கு ஆளாகிவிட்னர். திரும்ப தன் வீட்டிற்கு வந்தபோது மனதால் மிகவும் அடிப்பட்டு துன்பத்தில் நாட்களைக் கடத்தி வந்தாள். படிப்பை முடிக்கும் முன்பே தன் நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டவள் பௌவ். முதல் முதலாக தன்னுடைய துணையாக சேர்த்தது இந்த காமாட்சியை தான். பள்ளிப் பருவத்தை வெளிநாட்டில் கழித்த நம் நாயகி சொந்த ஊருக்கு வந்தபோது அவள் தேடிச் சென்ற உறவினர்களின் பட்டியலில் காமாட்சியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. எனவே அவள் நிலையை உணர்ந்து அவளுடனேயே இவளை வைத்துக் கொண்டாள். எல்லாவிதத்திலும் அவளை வலிமையாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு படிப்பை வேலை செய்தபடியே தொடங்க வைத்தாள் கணினிப் பயிற்சியும் இவளுக்கு அளிக்கப்பட்டது யாரையும் சார்ந்து வாழாதபடி அவளை ஒரு தனித்துவமிக்க பெண்ணாய் உருவேற்றினாள். எப்போதுமே காமாட்சிக்கு பௌ ஒரு ஐடியல் ரோல் மாடல். அவளின் ஹீரோ வொர்க் ஷிப் எப்போதும் பௌவ்க்கே உரியதானது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் & சரித்திரம் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
எந்த நேரத்திலும் எந்த ஒரு வேலையிலும் அவளின் நாயகி சிறந்தவள், சிறப்பு மிக்கவள் , உயர்ந்த மனம் படைத்தவள், உதவுவதற்கு அஞ்சாதவள், தவறு என்று தோன்றும் விஷயத்தை தட்டிக் கேட்காமல் விடாத வீரப்பெண், குடும்ப பின்னணி எதையும் ஏற்காமல் அவளாகவே முன்னேறி இப்போது women's டிசைனிங் உலகில் அவளுக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவள். எந்த ஒரு பிரச்சனையையும் தயங்காமல் சமாளிக்கும் திறமை கொண்டவள். வியாபாரத்தில் அல்லது பண விஷயத்தில், தரத்தில் மற்றவர்களின் எண்ணத்தில் இப்படி எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை நினைத்து வருந்தி இதுவரை நான் பார்த்ததில்லை. அந்த அளவிற்கு ஒரு strong personality மை strong women. பெண்களால் முடியாதது எதுவும் அல்ல என்று பல பேர் சொல்ல கேட்டிருக்கலாம் ஆனால் அதை நடைமுறையில் கொண்டுவந்த பெருமை கூறியவள் என் அன்பு தோழி மனதின் முழுமையாக அன்பை மட்டுமே நிரப்பி வைத்துள்ள நல்ல மனிதி.
வியாபாரத்தில் ஏதோ பெரிய பிரச்சனை வந்ததாக நாங்கள் அனைவரும் சோர்ந்து போக தொடங்கும் போதெல்லாம் அது ஒன்னும் இல்ல நீங்க போய் ஒரு டீ குடிச்சிட்டு டென் மினிட்ஸ் பிரேக் எடுத்துட்டு வாங்க அப்புறம் பேசுவோம் என்று கூலாக சொல்லியபடி எதையோ செய்வாள். பிரேக் முடிந்து உள்ளே வந்தாள் பிரச்சனைகள் மாயமாய் போயிருக்கும், அல்லது அதற்கான தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அல்லது எடுக்கத் தொடங்கி பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருக்கும் அனைவரும் ஆச்சரியமாக எப்படி என்று கேட்டால் இட்ஸ் கான் போயிந்தே போயே போச்சு என்று சிரித்தபடி கூறுபவள். வாயில் சாக்லேட் பாரை வைத்தபடி கார்ட்டூன் பார்க்க தொடங்கி இருப்பாள். வளர்ந்த மங்கையின் வடிவில் சின்ன குழந்தை என்று காட்சியளிப்பவள் என் பௌவ்.
காம்ஸ் எனக்கு ஒரு உதவி நான் ஒரு ஒருவாரத்துக்கு ரெகுலரா office க்கு வருவநானு தெரியலம்மா அதனால கம்பெனியோட முழு பொறுப்பும் உன்ன சேர்ந்தது நான் சில செக்கிள் எல்லாம் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன். அப்புறம் நீ பார்க்க, பண்ண வேண்டிய டாகுமெண்ட்ஸ்ல்லம் அழகா அதுக்கு என்ன என்ன பண்ணனும்னு என்ன என்ன செய்ய வேண்டும் என்று கணினியில் பதிந்து வைத்துள்ளேன். உனக்கு எப்போ என்ன உதவி இல்ல ஏதாவது ஏதாவது சொல்யூஷன் தேவைப்பட்டாலும் don't பீல் ஆடு 2 கால். என் பர்சனல் நம்பர் எப்பவும் ஆன்ல தான் இருக்கும் நீங்க அதிலேயே என்ன கூப்பிடலாம்.
காமாட்சியுடன் பேசியபடி போனில் மேனேஜரை அழைத்தவள் அவர் வந்ததும் தான் ஒரு வாரம் ஊரில் இல்லாததையும் தன் முழு பொறுப்பையும் காமாட்சியிடம் ஒப்படைத்த தையும் அவள் இதற்காகவே ட்ரெயின் பண்ணப்பட்டவர் என்று கூரி காமாட்சிக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருக்கும்படி பணிந்தாள். அவள் சொன்ன அனைத்தையும் கேட்ட மேனேஜரிடம் எதுவாக இருந்தாலும் காமாட்சி மூலமாகவே தன்னை தொடர்பு கொள்ளும்படி கூறிவிட்டு அவர் வேலைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.