(Reading time: 16 - 32 minutes)

சரி மச்சா.. எல்லாத்தையும் நான் அம்மூகிட்ட சொல்லீட்டேன்.. அவ தனியா எங்கையும் போகமாட்டேன்னு சொன்னாடா.. இப்போ நமக்காக தான் எல்லாரும் கீழ வெய்டிங்.. மச்சா.. எல்லா பிளானும் சரியா தானே இருக்கு.. இன்னும் ஒருவாரத்துக்கு நாம எல்லாரையும் பத்திரமா பாத்துக்கனும்.. எனக்கு அப்போ அப்போ பிசினஸ் கால் வேர வரும் மச்சா.. நீ கொஞ்சம் அம்மூ கூடவே இரு..

சரிடா.. நான் கர்னிய பாத்துக்கரேன்.. நீயும் முடிஞ்சவரை அவ கூடவே இருக்கர மாதிரி பாத்துக்கடா.. ஏன்னா உன்னோட அம்மூ உன்ன தான் அதிகமா தேடுவா.. என்ன புரிஞ்சதா..

டன் மச்சா.. வா போகலாம் என இருவரும் கீழே இறங்கி வந்தனர்.. இன்னையில்ல இருந்து அவங்க டூர் தொடக்கம்.. எல்லாரும் பஸ் வரவும் அதில் ஏறி அமர்ந்து கொண்டனர்..

அபியே பேச தொடங்கினான்.. எல்லாரும் பாருங்க.. நாம முதல்ல பாக்க போர இடம் பொட்டானிக்கல் கார்டன்.. அதுக்கு அடுத்து பைகரா நதி.. இந்த ரெண்டு இடத்துக்கு தான் நாம இன்னைக்கு போக போரோம்.. யாரும் தனியா போயி பிரச்சனையில்ல மாட்டிக்காதீங்க.. நாங்க யாருக்காவது போன்பன்னினா.. அதை தயவுசெய்து கட்பன்னாம.. எடுத்து பேசுங்க.. பொண்ணுங்க தனியா போக வேண்டாம்.. நாங்க அங்க போயி இறங்கினதும் எப்ப திரும்பி வரனும்ன்னு சொல்லுவோம்.. கண்டிப்பா அந்த டைம்ல எல்லாரும் வந்திருங்க.. இது தெரியாத ஊர்.. கூட பொண்ணுங்களும் வந்திருக்காங்க.. நாங்க உங்களை ரொம்ப நம்பரோம்.. கண்டிப்பா உங்களுக்கு நான் ரொம்ப ரூல்ஸ் எல்லாம் போடலை.. ரொம்ப என்ஜாய் பன்னுங்க.. அதே நேரம் நாம இருக்கர இடம், சூழ்நிலையும், கூட இருக்கரவங்கன்னு எல்லாம் நினைவில்ல இருக்கனும்.. நீங்க தனிதனியா யார்கூட போறீங்கன்னு எனக்கு தெரியனும்.. நான் சொல்லரமாதிரி பன்னா.. உங்களுக்கும் சரி.. எனக்கும் சரி.. எந்த பிரச்சனையும் இல்ல.. இப்போ சொல்லரது தான் நாம நம்ம ஊருக்கு போறவரைக்கும்.. ஒவ்வொரு தடவையும் தனித்தனியா சொல்லமாட்டோம்.. ஜாக்கிரதையா இருக்கனும்.. அதே போல கூட இருக்கரவங்களையும் பாத்துக்கனும்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீனுவின் "மழையின்றி நான் நனைகின்றேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

உங்க எல்லாருக்கும் அபி சொன்னது புரிஞ்சது தானே.. இதுல யாரும் தப்பா நினைக்காதீங்க.. உங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம் அதான்.. சரி இப்போ எல்லாரும் கிளம்ப ரெடியா..

எல்லரும் ரெடியா இருக்கோம்.. போலாம் ஆகாஷ்.. என அனைவரும் கோரசாக கத்தி அவர்களின் மகிழ்ச்சியை தொடங்கினார்கள்.. பஸ்சில் ஒரே ஆட்டம்பாட்டம் தான்.. பொட்டானிகல் கார்டன் வந்த பின் அனைவருக்கும் டிக்கெட்ஸ் எடுத்து கொடுத்து உள்ளே சென்றார்கள்.. எல்லாரும் கவனிங்க.. இப்போ மணி 9.30 சரியா மதியம் 1.00 மணிக்கு எல்லாரும் இதே என்டரன்ஸ்சுக்கு வந்தரனும்.. எல்லாரும் வந்த அப்பரம் தான் நாம சாப்பிட போகனும்.. யாரும் மறக்காதீங்க.. 1.00 மணிக்கு எல்லாரும் வந்திருக்கனும்.. அனைவரும் விடைபெற்று தனி தனியாக குழுவாக பிரிந்து சென்றனர்..

எல்லாரும் போயிட்டாங்கப்பா.. இப்போவாது நாம இந்த பொட்டானிக்கல் கார்டன சுத்த போகலாமா என் சின்சியர் சிகாமணிகளே.. மனு ஏறஇறங்க கிண்டல் பாணியில் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு கண்களை இடுக்கி புருவம் உயர்த்தி கேட்டாள்..

இருவரும் அவளை பார்த்து புன்னகைத்து போலாம்.. கோவபடாத அம்மூ..

ஆனாலும் நீங்க அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்க சாமி.. என்னால இதை தாங்க முடியலைடா..

அம்மூ பாத்தியா சந்தடியில்ல என்னோட அபியை நீ டா போட்டு பேசர.. மனுவை போட்டு கொடுத்துவிட்டானாம்..

ஹாஹ்ஹா.. தகரடப்பா.. என்ன நாரதர் வேளைடா இது.. நீ போட்டு கொடுத்ததும் நாங்க உடனே பயந்துடுவோமா.. போடா..

நீ பயப்படலை தான் ஆனா அங்க பாரு அபி உன்னை தான் முறைக்கறான்..

டேய்.. என மனு ஆகாஷ் மேல் பாய்வதுக்குள்.. அவனுக்கு போன் வரவும் அவன் எஸ்கேப்பாகிவிட்டான்..

போச்சு.. இந்த தகரடப்பா சும்மா இல்லாம ஜித்துகிட்ட போட்டுகுடுத்துட்டு போயிட்டான்.. இப்ப தனியா விட்டு போன் பேச கிளம்பிட்டான்.. இன்னைக்கு நான் செத்தேன்.. அட என்ன மனு.. நீ இதுக்கு எல்லாம் பயப்படலாமா.. எவ்வளவு பிரச்சனையை நீ அசால்ட்டா சமாளிச்சிருக்க.. ஜித்து தானே பாத்துக்கலாம்..என மனதைரியத்துடன் அது வந்து ஜித்து.. என்று அவள் ஆரம்பிக்கும் போது அபி பேச்சை தொடங்கினான்..

நீ ஏன் கர்னி டூர்க்கு வர்லைன்னு சொன்ன.. நேரடியாகவே தாக்குதலை தொடங்கினான் அபி..

அவனின் இந்த கேள்வியை எதிர்பார்க்காததால் என்ன சொல்லுவது என்று திணறீனாள்..  அது.. அது.. வந்து..

நான் உன்கிட்ட இருந்து உண்மைய எதிர்பார்க்கரேன் கர்னி.. நீ என்கிட்ட சொல்லுவ தானே.. சொல்லு என்ன காரணம்..

இதை யார் உன்கிட்ட சொன்னது.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல ஜித்து..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.