(Reading time: 16 - 32 minutes)

நான் உன்கிட்ட இருந்து உண்மைய தானே எதிர்பார்க்கரதா சொன்னேன்.. சரி.. இதை என்கிட்ட ஆகாஷ்தான் சொன்னான்.. நீ டூர் போரோம்ன்னு முதல்ல சொல்லும் போது வரேன்னு சொன்னீயாம.. அப்பரம் நீங்க போயிட்டு வாங்கன்னு சொன்னீயாம.. நீ எதனால டூருக்குவரலைன்னு சொன்ன..

ஜித்து.. அது..

உனக்கு என்கிட்ட சொல்ல விருப்பம் இல்லையா கர்னி.. என்கிட்ட உன்னோட விஷயங்களை பகிர்ந்துக்கமாட்டியா..

லூசுமாதிரி பேசாத ஜித்து.. என்னால இப்போ அதற்கான காரணத்தை தெளிவா சொல்லமுடியாது.. ஏன்னா நானே இன்னும் ஒரு முடிவுக்கு வர்லை.. ஆனா ஒரு தெளிவு இருக்கு.. அதனால தான் நான் இப்போ சந்தோஷமா இருக்கேன்.. கண்டிப்பா நான் உன்கிட்ட பகிர்ந்துக்குவேன்.. ஆனா அதுக்கு நான் ஒரு முடிவு எடுத்ததுக்கு அப்பரமா தான் என்னால உன்கிட்டையே சொல்லமுடியும்.. அதனால திரும்பவும் அதை பத்தி கேக்காத.. நான் சந்தோஷமா இந்த டூரை உங்க எல்லார் கூடவும் என்ஜாய் பன்னும்ன்னு நினைக்கரேன்..

சரி.. நீ என்கிட்ட இவ்வளவு சொன்னதே போதும்.. நீ பகிரந்துக்க போர அந்த நாளுக்காக நான் காத்திருப்பேன்.. வா ஆகாஷ் இப்போ வரமாட்டான்.. முக்கியமான போன்னு நினைக்கரேன்.. நாம சுத்தி பார்க்கலாம்..

ம்.. போலாம்.. சரி நான் உன்ன டா போட்டு கூப்பிரதுல்ல எதுவும் பிரச்சனையா.. அவள் இழுத்து மெதுவாக கேள்வியோடு கூறினாள்..

கர்னி மேடம் கூப்பிரதுல்ல எந்த பிரச்சனையும் இல்ல..

ஏய்.. செமடா.. இனிடா நான்டா உன்னைடா டா போட்டுடா கூப்பிடலாம்ல்லடா..

அடிப்பாவி.. நீ கூப்பிரதுல்ல டா மட்டும் தான் பேபிமா இருக்கு.. வேர எதுவும் இல்ல.. யாராவது கேட்டா என் மானம் போயிரும் பேபிம்மா.. கொஞ்சம் இந்த டா-வ குறைச்சுக்கம்மா..

அப்படியாடா.. நான்டா இதைடா யோசனைடா பன்னிடா பாக்கரேன்டா..

அடிங்க.. உன்ன.. என அபி மனுவை துரத்தினான்.. மனுவும் அபியின் கையில் சிக்காமல் புகுந்து வலையிந்து என ஆட்டம் காண்பித்தாள்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

மனுவை பிடிக்கமுடியாமல் அபி ஒரு இடத்தில் போட்டு இருந்த பென்சில் அமந்து மூச்சுவாங்கினான்..

வா மச்சா.. என்ன அம்மூவ பிடிக்க முடியலையா.. அவ அவ்வளவு சீக்கரம் யார் கையில்லையும் சிக்கமாட்டா மச்சா..

நீ எப்போடா போன் பேசிட்டு வந்த..

நான் பேசிட்டு வரும் போது நீங்க ரொம்ப சின்சியரா சண்டைபோட்டு இருந்தீங்களா.. அதான் அதை ஓரமா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்.. ரொம்ப நல்லாயிருக்கு மச்சா..

அடபாவி.. நாங்க சண்டைபோடரது உனக்கு ரொம்ப நல்லா இருக்கு..

ஆமா மச்சா..

அதைய நீவேர ஓரமா நின்னு பார்த்துட்டு இருந்த..

ரொம்ப சரியா சொல்லரடா..

இதுல நல்லா இருக்குன்னு என்கிட்டையே சொல்லர..

எக்ஸாட்லி மச்சா..

அடபடுபாவி.. இதை வேடிக்கையில்லடா.. என்ன நீ அப்பவே காப்பாதியிருக்கனும்டா எருமை என அவன் மேல் பாய்ந்தான் அபி..

டேய்.. நான் என்னடா பன்னரது..

நீ அப்பவே வந்து கர்னி இப்படி எல்லாம் சந்து பொந்துன்னு ஓடும்.. உன்னால பிடிக்க முடியாது.. நான் ஏற்கனவே பட்டுயிருக்கேன்.. வேணாம் மச்சான்னு எனக்கு ஒருவார்த்தை சொல்லியிருந்தா.. நான் இப்படி மூச்சு வாங்க ஓடவேண்டிய அவசியம் இருக்கதுல்லடா பாவி..

விடுடா.. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்ன்னு.. ஒரு நல்ல எண்ணம் தான்..

ஆனா ஒன்னுடா.. உன்ன மாதிரி ஊருக்கு ஒருத்தன் இருந்தாலே போதும் மச்சி.. நாடு எங்கையோ போயிரும்..

தாங்கியூ.. தாங்கியூ.. என்ன ரொம்ப புகழாத மச்சா..

நீ ஏன்டா.. போடா.. முதல்ல அந்த கர்னிய வர சொல்லுடா..

நான் இங்க தான்டா இருக்கேன்டா..

உன்ன கொல்லபோரேன் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத கர்னி..

சரி பொழச்சு போன்னு விடரேன் ஜித்து..

ரொம்ப நன்றிம்மா.. உன் பெரிய மனசு இறங்கி வந்ததுக்கு..

ஏய் கார்டன் செம சூப்பரா இருக்குப்பா.. ரிலாக்ஸ்சா ஒரு ரவுண்டு போகலாமா.. இல்ல இப்பவும் யாராவது கழுண்டுக்க போறீங்களா..

அம்மூ.. வேளையிருக்குன்னு தானே நாங்க போறோம்.. அப்பவும் உன்கூட எங்கள்ல ஒருத்தர் இருக்கோம் தானே..

பாத்தியா.. எங்கள்ல ஒருத்தர்ன்னு தானே சொல்லர.. எனக்கு நீங்க ரெண்டு பேரும் கூட இருக்கனும்ன்னு தோணுது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.