(Reading time: 14 - 27 minutes)

பழங்காலத்துல அரசர்கள் தன் சாப்பாட்டுல விஷம் இருக்கானு டெஸ்ட் பண்ண ஒரு ஆள அப்பாயிண்ட் பண்ணியிருப்பாங்க. முதல்ல வேற ஒருத்தர் சாப்பிட்டு அவருக்கு எந்த தீங்கும் நேரலைனு கன்பார்ம் பண்ண அப்புறமா ராஜா சாப்பிடுவார்

ஆமா கேள்விப்பட்டிருக்கேன்ரவி சொல்ல

இதுல முக்கியமான இன்னொரு விஷயம் என்னனா? நஞ்சு மூலிகைகள் உடலை மட்டுமில்ல மூளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதாவது விஷமூலிகை சாப்பிட்டவங்க மனதை அதை கொடுத்தவங்க கண்ட்ரோல் பண்ணமுடியும். கிட்டதட்ட அவங்க அடிமை மாதிரி ஆகிடுவாங்க.”

மோஹனம், தம்பனம், வித்வேசனம், வசியம், பேதனம், மாரணம் இந்த ஆறும் முக்கியமான அம்சங்கள். எல்லாமே சைக்காலஜி பேசுடு எபக்ட்ஸ். இந்த ஆறும் விஷ மூலிகைகள் சரியான விகிதத்துல கலந்த கொடுக்கிறதுனால ஏற்படும்.”

மூளைய பாதிக்கும் தங்களையே மறந்து என்ன செய்றோம்னு தெரியாம செயல்படுவாங்க.”

இந்த ஆறு அம்சங்களுக்கு என்ன அர்த்தம்?” சாரு கேட்க

ஷார்ட்டா சொல்றேன் . . மோஹனம் இது கவர்ந்திழுப்பது ஒரு குறிப்பிட்ட மனிதர் இல்லனா பொருள் மீது ஆசைய தூண்டிவிடுவது. இதனால பாதிக்கபட்டவங்க குறிபிட்ட மனிதர் இல்ல பொருள் கிடைக்க எந்த எல்லைக்கும் போவாங்க

தம்பனம் - விஷமூலிகை உட்கொண்டவரால சுதந்திரமா செயல்பட முடியாது. சிந்திக்கும் திறன் இருக்காது. ரோபோ மாதிரி இருப்பாங்க இவங்க யார் விஷமூலிகை கொடுத்தாங்களோ அவர் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்படுவாங்க.”

ஐயோ . .ஆகாஷ் உண்மையா?” என சுவாதி அலறியேவிட்டாள்

ஆமா சுவாதி. உனக்கு டென்ஷன் ஆனா போய் ரெஸ்ட் எடு . . இதெல்லாம் நீ கேட்க வேண்டாம்என ஆகாஷ் கூற

இல்ல சஸ்பென்ஸல விடமுடியாது . . நீ கன்டின்யூ பண்ணுஎன்றாள்.

அடுத்தது வித்வேசனம் இது மன இயல்புகளை முழுமையா மாற்றக் கூடியது. இந்த வார்த்தைக்கு பகை மூட்டல்ன்னும் சொல்லுவாங்க. இருதரப்பினருக்கு பகை மூட்டி அதை பயன்படுத்திகறது.”

வசியம் இது ரொம்ப பிரபலமான வார்த்தை உங்களுக்கே தெரியும. பெண்ணை கவர்நதிழுக்க இது அதிகம் யூஸ் பண்றாங்க

நெக்ஸ்ட் பேதனம் என்பது மனதை பேதலிக்க செய்வது. பிஹேவியரை மாத்தி அவங்க பைத்தியம்னு பலரை நம்ப வைக்க இதை பயன்படுத்துவாங்க

மாரணம் பேர்லயே தெரிஞ்சிக்கலாம். அதாவது மரணம்.”

ஆறு அம்சங்ளால பாதிக்கபட்டவங்க சரியாகவே முடியாதா?” இது சாரு

முடியும் . . சரியான மூலிகைய சரியான அளவு கொடுக்கணும். சில விஷமூலிகைகள் ரெண்டு மூணு வருஷத்துக்கு பிறகுதான் உடல்ல இருக்குனு கண்டுபிடிக்கவே முடியும்.”

அலோபதில ஓரளவு கியூர் பண்ணலாம் நினைக்கிறேன். அதை பத்தி ஐடியா இல்ல

இந்த ஆறுல நீங்க எதை பாலோ பண்ணிங்க பாஸ்?” ரவி கேட்டான்.

பகை மூட்டல் அதாவது வித்வேசனம். ஆசிரமத்துல இருக்கிற துரையோட ரெண்டு ஆளுங்களுக்கும் துரைக்கும் பகை மூட்டிவிட்டேன். சிம்பிள்.” என தோளை குலுக்கினான் இயல்பாக

என்ன மூலிகைனு கொடுக்கணும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” மீண்டும் ரவி

முதல்ல இதை சாதாரணமா ஒரு இடத்துல படிச்சேன். அதை பத்ரிநாத்கிட்ட பேசினேன். அவர்தான் சுவாமிஜிக்கு இது தெரியும்னு சொன்னாரு. அப்பாவோட ஹெல்பனால சுவாமிஜியை குகைக்கு கொண்டு போனோம். ரவி உங்களை இங்க சுவாமிஜி மாதிரி நடிக்க வெச்சோம்

இதுதான் காரணமா . . உங்க அப்பா எனக்கு ஆர்டர் போடும்போது குழப்பமா இருந்திச்சி . . எதிர்த்து கேட்கவும் முடியலஎன்ற ரவியும் சுவாதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். குழப்பங்கள் அகன்றதை அவர்கள் முகம் தெளிவாக காட்டியது.

சுவாமிஜி செஞ்சு கொடுத்த மூலிகை கலவைய ஆசிரமத்துல இருக்கிற துரை ஆளுங்க சாப்பாட்டுல கலந்து கொடுத்தேன். அதுக்கு சாரு தாத்தா கெட்அப்புல உதவினா. அப்புறமா பத்ரிநாத் அசிஸ்டெண்ட் அந்த வேலைய ஏத்துகிட்டாங்க.”

அந்த மூலிகைய சாப்பிட்டா மட்டும் வேலை முடியல . . அவங்க மனசை திசைதிருப்பணும். இதுக்கு ரெண்டு விஷயம் முக்கியம் ஒண்ணு உருவம் இன்னொன்னு குரல்

குறிப்பிட்ட அந்த உருவம் இல்ல குரல்க்குதான் அவங்க கட்டுப்படுவாங்க. நான் குரல் மட்டும் பயன்படுத்தினேன். என் குரலை கொஞ்சம் மாத்தி கரகரப்பா அவங்களோட பேசி அவங்க மனசுல பதிய வெச்சிட்டேன்

சாருவிற்கு ஆகாஷ் அந்த இருவர் பின்னால் நின்றவாரே பேசியதன் நோக்கம் இப்பொழுது புரிந்தது.

இப்ப நான் அவங்க முன்னால போய் நின்னு என் உண்மையான குரல்ல பேசினா அவங்களால என்னை கண்டுபிடிக்கவே முடியாதுஎன்றான் ஆகாஷ்.

இந்த மூலிகை செய்யும் ரகசியம் சுவாமிஜிக்கு மட்டும்தான் தெரியும். இதைதான் அவர் தன்னோடு முக்கியமான ஐஞ்சு சீடர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். இதை எழுதி வெச்சிக்க கூடாதாம். செவி வழி ரகசியம்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.