Page 2 of 2
உன் அன்பு மட்டுமே போதும். தவறாக எண்ண வேண்டாம். இங்கு அன்புக்கு தான் பஞ்சம்.
எங்களுக்கு அன்பும் அக்கறையும் மட்டுமே தேவை. பலர் எங்களை அனாதை என ஏசுவதுண்டு. நாங்கள் இந்த சமூகத்தில் உள்ள சில மிருகங்களால் தான் அனாதை ஆனோம் என அவர்கள் புரிந்துக் கொள்வதில்லை.
நீ சாட்டிங் செய்வதைப் போல உன் கடிதம் உள்ளது என எழுதி இருந்தாய். எனக்கு உன் கடிதத்தின் போக்கு மிகவும் பிடித்திருந்தது. எதார்த்தமாக மனதில் தோன்றியதை மறைக்காமல் எழுதி இருந்தாய்.
என்னுடைய லெட்டர் பார்மலாக உள்ளதா? புரியவில்லை என்றால் பதிலில் எழுது மாற்றிக் கொள்கிறேன்.
ஆவலுடன் உன் கடிதத்தை எதிர்பார்க்கிறேன்.
என்றும் உன் அன்பு
கி.மு.
04/07/2018
கடிதங்கள் இணைக்கும் . . .