(Reading time: 13 - 26 minutes)

தானே இவங்க உறவை முடிவுப் பண்ணுச்சு?" ஏளனம் தெரிந்தது அவர் குரலில்!! மதுமதியின் அருகே நெருங்கியவள்,

"உன் கடந்தகாலம் எனக்குத் தெரியும் மறந்துடாதே!" அந்தக் கூற்றில் பேச்சிழந்துப் போனார் மதுமதி.

"உன் மகன்கிட்ட அந்தக் கேவலமான கடந்தக்காலத்தை சொல்லும் போது உன் நிலைமையை யோசித்துப் பார்த்தியா? உன்னை மாதிரி தானே அவனும் இருப்பான்? உன்னை நினைத்து ரொம்ப பெருமைப்படுவானோ!"

"சிவன்யா!"

"உஷ்...! என் முன்னாடி குரல் உயர்த்தி பேசாதே! நான் இவரை கூட்டிட்டுப் போக தான் வந்தேன்!உன்கூட பேசிக்கிட்டு இருக்க கிடையாது!வரேன்!" என்று சூர்ய நாராயணனிடம் திரும்பினாள்.

"என்னை மன்னித்துவிடுங்கப்பா! உங்க முன்னாடி குரல் உயர்த்தி பேசி இருக்க கூடாது! அவருக்கு கொஞ்சம் தவிர்க்க முடியாத வேலை வந்துடுச்சு! அதான்பா, என்னை அனுப்பி வைத்தார்! கொஞ்ச நேரத்துல வந்துவிடுவார். வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்!" புன்னகையோடு நாற்காலியை தள்ளிச் சென்றாள் அவள், மதுமதியை சிறிதும் மதியாதவளாய்!!அவள் இழுத்துச் சென்ற நாற்காலியை தடுத்தார் சூர்ய நாராயணன்.

"த...ர்...மா!" தன் மனைவியின் புகைப்படத்தினை சுட்டினார்.

"ஓ..!கவனிக்கலை இருங்க!" என்று புகைப்படத்தை எடுத்துக் கொண்டாள் சிவன்யா.

"போகலாம்பா!" என்று அவரை அழைத்துச் சென்றாள் அவள்.

"சிவன்யா.....!" அவர்கள் சென்றப்பின் அந்த அறை முழுதிலும் மதுமதியின் குரோத குரலே நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது!!!!

Episode 16

Episode 18

தொடரும்!

{kunena_discuss:1149}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.