(Reading time: 11 - 21 minutes)

சேர்த்து பத்திரமா வச்சுக்கணும்னு தோணுது.காதல் அன்பு எல்லாத்தையும் தாண்டி இத்தனை வருஷமும் உன் வாழ்க்கைல நீ இழந்த சின்ன சின்ன சந்தோஷங்கள் எல்லாமே பெருசு பெருசா இனி கிடைக்கும் அதுக்கு நான் பொறுப்பு.

நீ நீயா இருக்கலாம்.உனக்கு பிடிச்சதை செய்யலாம் எல்லாத்தையும் விட முக்கியம் இன்னும் பத்து நாள்ல வரப் போற ஐஏஸ் எக்ஸாமை நல்லபடியா எழுதலாம்.உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்கிட்ட தாராளமா கேளு.ஷான்யா ஐஏஎஸ் ஆன அப்பறம்தான் ஷான்யா ஆத்விக் ஆவா அதுக்கு நான் பொறுப்பு..என்ன ஓகே வா.”

தேங்க் யூ சோ மச் ஆத்விக்..நான் ரொம்பவே லக்கினு இப்போ பீல் ண்றேன்..”

அதெல்லாம் இருக்கட்டும் ஆமா இந்த அட்டெம்ட்ல பாஸ் பண்ணிடுவ இல்ல?நீ பாட்டுக்கு நாலஞ்சு அட்டெம்ட் எடுத்துராத நான் பாவம் மா..ரொம்ப காலம் எல்லாம் உன்னை விட்டுட்டு இருக்க முடியாது?”

ஹா ஹா..இனி எனக்காக இல்லைனாலும் உங்களுக்காக நல்லா படிப்பேன்.இந்த அட்டெம்ட்லேயே க்ளியர் பண்ணிடுவேன்.இட்ஸ் அ ப்ராமிஸ்.”

குட் கேர்ள் அப்போ நான் போய் இப்போவே முகூர்த்த தேதியை பார்க்க சொல்றேன் அப்பா அம்மாகிட்ட..”

ஆத்விக் கேட்கனும்னு நினைச்சேன் உங்க வீட்ல சம்மதம் சொல்லிட்டாங்களா?”

நீ வேற அவங்களுக்கு என் லவ்வோட வரலாறு பூகோளம் எல்லாமே தெரியும்.ஜீயும் எங்கம்மாவும் சேர்ந்து எத்தனை நாள் என்னை கிண்டல் பண்ணிருக்காங்க தெரியுமா?இனி பாரு அவங்ககிட்ட நான் போட போற சீன் என்னனு.”

உங்க ப்ரண்ட் அண்ட் உங்க அம்மா எல்லாம் வாய்ப்பே இல்ல..ஆனா அவங்களைப் பார்த்தப்போ கண்டீப்பா எனக்கு பொறாமையா இருந்துச்சு..நம்ம இந்தமாதிரி எல்லாம் மனசுல பட்டதை எந்த தயக்கமும் இல்லாம வெளில பேச முடியலையேனு..இனி நானும் கண்டிப்பா அவங்களை மாதிரி தான் இருக்க போறேன்.”

ஏன் உனக்கு இப்படி ஒரு விபரீத ஆசை..அவ ஒருத்தியவே என்னால சமாளிக்க முடில இதுல உன்னையும் வேறயா..நீ இப்படி சமத்து பொண்ணாவே இரு அப்போ தான் ஆத்விக்கு சேஃப்..”

ம்ம் ரொம்ப தெளிவா தான் இருக்கீங்க..”

இல்லையா பின்ன குடும்பஸ்தன் ஆகுறதுனா சும்மாவா..”,அதற்குள் அவள் தந்தையின் குரல் கேட்க ஆத்விக்கிடம் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துச் சென்றாள் ஷான்யா.ரேஷ்வாவின் அழைப்புகளை கவனித்தவன் அவனை அழைத்து பேச ஆரம்பித்திருந்தான்.

ஜெயந்த் ஜீவிகாவிடம் மாட்டி முழித்துக் கொண்டிருந்தான்.அத்தனை நேரம் அவனை அடித்துத் தீர்த்தவள் மூச்சு வாங்க அமர்ந்திருந்தாள்.

ஜீவி மாமாவை பார்த்தா பாவமா தெரிலயா இரக்கம் காட்டு செல்லம்..”

ம்ம் அதனால தான் தலகாணியால அடிச்சுட்டு இருக்கேன் இல்ல அம்மிக்கல் தான்.”

அடிப்பாவி கொலைகாரி..இரத்தக் காட்டேரி..”

ம்ம் அடங்க மாட்டீங்க போலயே..”,என்றவள் கையை இழுத்து நறுக்கென கடித்து வைத்தாள்.

ஸ்ஸ்ஸ் ஆஆ ஐயோ அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னா நிஜமாவே ரத்தத்தை உறிஞ்சிருவ போலேயே..ஏன் டி இப்படி பண்ற..எத்தனை நாள் கொலைவெறி உனக்கு?”

வர வர வாய் ரொம்ப ஜாஸ்தியா போச்சு மாம்ஸ் உங்களுக்கு..சரி நா ஒண்ணு கேட்கணும் உங்ககிட்ட..”

விளையாட்டை ஒதுக்கிவிட்டு கட்டிலின் பின்புறம் சாய்ந்து அமர்ந்தவனாய் அவள் கைப்பற்றியவாறு என்ன என்று கேட்டான்.

இல்ல கல்யாணத்துக்கு முன்னாடியவது எங்க அம்மாக்கு பயந்து கொஞ்சம் அடங்கி ஒடுங்கி இருந்தேன்.இப்போ எல்லாம் சின்ன பொண்ணு மாதிரி ரொம்ப ஆட்டம் போடுறேனோனு தோணுது.உங்களுக்கும் அப்படி எதுவும் தோணிணா மறைக்காம சொல்லிடுங்க.உங்களை யாரும் எதுவும் சொல்லிட கூடாது அதனால தான் கேட்குறேன்ன்

ஏன் ஜீவிம்மா என்னென்னவோ பேசுற?”

இல்ல ஜெய் கொஞ்ச நாளாவே நான் உங்ககிட்ட இதைப்பத்தி பேசனும்னு தான் நினைச்சேன்.சொல்லுங்க

ஜீவி கடவுள் சிலரை சந்தோஷமா இருக்கணும்னு படைப்பார்.சிலரை கஷ்டப்படணும்னு படைப்பார்.ஆனா ரொம்ப சிலரை மட்டும் தான் தன்னை சுத்தி இருக்குறவங்களை எல்லாம் சந்தோஷமா வச்சுக்கனும்னு படைப்பார்.அப்படி ஒருத்தி தான் நீ.

உன்னை பத்தி யோசிக்குறதை விட உன் கூட இருக்குற ஒவ்வொருத்தருக்காகவும் யோசிக்குற பாரு அது அந்த குணம் எல்லாருக்கும் எல்லாம் வராது டா..உண்மையை சொல்லணும்னா நானும் அப்பா அம்மாவும் கூட முன்னாடியை விட இப்போ ரொம்பவே சந்தோஷமா இருக்கோம்.

என்ன தான் விளையாட்டுத் தனமா இருக்குற பொண்ணு மாதிரி தெரிஞ்சாலும் உன் மெச்சூரிட்டி ரொம்பவே அதிகம்.அதனால எப்பவும் யாருக்கும் உன்னால எந்த பிரச்சனையும் வராது.நீ எப்பவும் போல சிரிச்ச முகமா சந்தோஷமா இரு.ஆட்டோமேடிக்கா நாங்க எல்லாரும் சந்தோஷமா இருப்போம்.என்ன சரியா?”,என்றவன் மூக்கைப் பிடித்து கிள்ளினான்.

தேங்க்ஸ் ஜெய்..லவ் யூ..”,என்றவள் அவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.அவளை உசுப்பேற்ற வேண்டும் என்று எண்ணியவனாய்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.