என்பதே தெரியாமல் தூரத்துச் சொந்தத்தில் அண்ணன் முறை வரும் மனிதரின் பிள்ளை என்று தன் மாமானர்றாள் அறிமுகப்மடுத்தப்பட்ட பிள்ளையைக் கொஞ்சி, சாப்பிட வைத்து, பௌவ்விக்கு மாமன் இல்லையா என்ற கேள்வியை முடக்க இவன் என் அண்ணன் மகன் தான் அவன் மாமா சடங்கை செய்வான் என்ற பார்வதியே அவள் வாயால் சொல்லி செய்யவும் வைத்தாள்
. சடங்கு முறைக்காக செய்ன் போடச் சொல்ல, அது வரை பெண் பிள்ளைகள் மற்றும்மின்றி யாரிடமும் நெருங்காதவன், பார்த்த நொடியே அவளையே ஒட்டிக்கொண்டு திரிந்தான் 7 வயதிலேயே. சடங்கு செய்ய பரிசு கொடுக்கனும் எனப் பார்வதியின் தந்தை ஈஷ்வரின் கையில் தன் தங்கச் சங்கிலியை கழட்டிக் கொடுத்து பௌவ்வின் கழுத்தில் போட சொன்னார். அவர் கொடுத்த செய்ன் ஒரு 10 பௌன் இருக்கும் போல, இவ்லோ பெரிசா அவ கழுத்தில் போட்டால் வலிக்குமே என்று தன் கழுத்தின் சங்கிலியை கழட்டி பௌவ்வியின் கழுத்தில் போட்டான்.
குழந்தைகள் எப்பவும்மே சிறப்பு. அவங்களுக்கு தொணரதுலாம் நம்ப யோசனைக்குக் கூட வராது ஆனால் சிம்ப்லீ அருமையாக இருக்கும். தனக்குச் செய்தவனுக்கு அவளும் திருப்பிச் செய்தாள். தன் கழுத்தில் எப்போதும் போட்டிருக்கும் தங்கத்தில் ஆன சங்களியை கழட்டி ஈஷ்வர்க்கு போட்டாள் அவள். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. குழந்தையின் மனதை மட்டுமே ரசித்தனர் மூன்று பேரைத் தீவிர. ஆம் தாத்தாக்கள் தான், அவர்கள் இதை இவர்களின் கல்யாண நிச்சயம் சொர்கத்தில் முடிவானதாகவே நினைத்தனர். பௌவ்விக்கு ஈஷ்வர் மடியில் வைத்துத் தான் காது குத்தினர். அவள் அழும்முன் இவன் அழுததும், தன்னை விட 5 1/2 வயது சிறுமியான பௌவ்வியை உன்னுடைய ஈஷ்வரிடா ஈஷ்வரா என்று தாத்தாக்கள் கட்டையைக் கொளுத்திய கதை வேறு இரிக்கிறதே.
வெலியைத் தெரியாத வரையே ரகசியம்.
பௌவ்வியை தங்களின் தாய் தந்தையை விட ஆதி அப்பவும் சிவகாமி அம்மாவும் தான் அதிக நேரம் வைத்திருப்பர். அவள் அதிகநேரம் துங்கியது ஆதிகேசவனின் மார்மீது தான். பரமேஷ்வர்க்கும் சிவகாமிக்கும் தன் பேத்தி தேவதைதான். அவள் வளர்ந்து 8 வயது ஆகும் வரை இந்தியாவில் வளர பின் வெளிநாட்டில் தந்தை தாயுடன் சென்றவிட சிவகாமி அம்மா தான் நொந்துப் போனாள். வருடத்தில் 11மாதம் இந்தியாவில் இருந்தக் குடும்பம் ஒரு மாதம் வெளிநாட்டில் தங்கியது பௌவ்விக்காக.
அண்ணன்கள் படிப்பிற்காக அங்கே செல்ல அவலோ தன் கல்லூரி படிப்பை இந்தியாவில் தான் என முடிவோடு கிளம்பி வந்துவிட்டாள் லச்சையும் அழைத்துக் கொண்டு. குடும்பமே மகிழ்ந்தது அவள் முடிவில். மகளைப் பிரிய முடியாமல் தன் தொழிலை இங்கும் அங்குமாய் நடத்தினார் தந்தை. தாய் தன் மருத்துவ சேவையை யாருக்காகவும் தியாகம் செய்யவில்லை. அவரும் இந்தியாவில் செடில் ஆனார். பரமேஷ்வர் தான் அமரேஷ்வரின் தொழிலை பார்த்துக் கொல்கிறான் அதற்காகவே அவர் சொன்ன படிப்பைப் படித்தான். அமர் அப்பா என்ன சொன்னாலும் சரியா இருக்கும் என்ற எண்ணம் கொண்டவன்.
பௌவ்விையையும் லச்சையும் இந்தியாவில் கல்லூரியில் சேர்த்தது அவளின் பரணிதாத்தா என்றாலும். எந்தப் படிப்பு எங்கே என்றெல்லாம் முடிவு செய்தது பரமேஷ் அண்ணா தான். இவளுக்குப் பின் அந்தக் குடும்பத்தில் 3 வருடத்திற்குப் பின் அவள் வள்ளி சித்திக்கும் பெண்பிறந்தாள். நிவிஷா என்ற பெயர் வைத்தது அமர் அப்பா தான். நிவிஷா செல்லம் தான் என்றாலும் பொள்வி அளவிற்குத் துரு துரு அல்ல கொஞ்சம் அமைதி தான். அமர் அப்பா செல்லம் என்றே அவளை அழைப்பர் அனைவரும்.
"ஒருவழியாக பௌவ்வி இந்திய வந்தடைந்து அங்கு அவள் செய்த பல நிலைகளில் சலவற்றை மட்டும் தெரிந்து கொண்டோம் இன்னும் பல சீண்டல் நோண்டலுடன் காதலும் வரும்."
சிவிமா ... என்று கட்டியவளை தன்னுடன் இறுக்கி கட்டிய சிவகாமி, ஆதிகேசவன் அவர்கலை அணைத்ததும் தான் நார்மல் ஆனார். மகளின் வருகை அவரை மகிழ்ச்சிக் கடலில் தல்லியது. சிவகாமி தன் மகளை உட்சி முதல் பாதம் வரை மகிழ்ச்சியுடன் பார்த்தார். அங்கே வெளிநாட்டில் தெரியாத உடை இங்கே தெரிந்தது வித்யாசமாய். அவள் ஒரு டீஷர்ட்டும் த்ரீ போர்த் பேண்டும் போட்டு வர அதை வேலையாள்கள் முத்தர்க் கொண்டு என்னவோ போல் பார்க்க, இயல்பிலேயே கொஞ்சம் வசீகர உடல்வாகு கொண்டவள், உயரமும் சாதாரண பெண்களின் உயரத்தைக் காட்டிலும் அதிகம் தான், அழகில் அவளுக்கு இனை அவளே. நீண்ட கூந்தல், கூர்மையான விழி, வசீகர தோற்றம். அழகிய அமேரிக்கப் பொம்மைப் போல் இருந்தாள். எனவே தன் மகள் மீது விழும் எந்தப் பார்வையும் தவறானதாக இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டார் சிவகாமி.
பாட்டி சிவகாமி பேத்தியைக் கொஞ்சிவிட்டு ஈஷ்வரிமா நான் உன் கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா என்று பீடிகை போட, என்ன பாட்டிமா இப்படிக் கேட்கின்றீர் என்ன செய்யவேண்டும்னு சொல்லுங்கள்.
நம்ப ஊர்க்கு இந்தத் துணி வேண்டாம்டா என்று பாட்டி சொல்ல.
அவ்வளவு தானே பாட்டி இனி நான் இந்த உடையைப் போடவில்லை இப்போதே போய் பாவாடை தாவணியை வாங்கி வரேன் என்று அவள் கிளம்ப,