(Reading time: 16 - 32 minutes)

இல்லங்க இன்னைக்கு அது மொத்தமா இல்லை.காலையில நான் ரெடியாகிட்டு இருந்தப்போ அப்பா தற்செயலா என் ரூம்க்கு வந்தார்.நம்ம விஷயத்துக்கு சம்மதம் சொல்லிட்டார் கல்யாண வேலைலையெல்லாம் பண்றார் ஆனாலும் என்கிட்ட அவரா எதுவுமே கேட்கல இதுவரை.

எனக்குமே அது ஒரு பக்கம் உறுத்திட்டே இருந்தது.ஆனாலும் எதுவும் வெளிக்காட்டிக்கல.இன்னைக்கு அவரா வந்தவுடனே ஒருவித பதட்டம் எதோ தப்பு பண்ணிட்டு அப்பா திட்டுவாறோனு பயப்படுவோமே அப்படி ஒரு உணர்வு தான்.இருந்தாலும் அமைதியாவே இருந்தேன்.

ஷான்யா..”

ப்பா சொல்லுங்க எதாவது செய்ணுமா?”

இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்ல உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.”

சொல்லுங்கப்பா..”

உன் அக்காகிட்ட பேசினியா?”

ம்ம் ஆமாப்பா நேத்து நைட் எப்பவும் போல கால் பண்ணிருந்தாளே பேசினேன்..”

..எப்படியிருக்கா?”

நல்லாயிருக்காப்பா..உங்ககிட்ட காலையில பேசினதா சொன்னாளே!”

ம்ம் பேசினா என்கிட்ட அவ எப்பவுமே நல்லாயிருக்குறதா தான் சொல்லுவா..ஆனா உண்மையாவே எப்படியிருக்கானு உன்கிட்ட தான சொல்லிருப்பா?”

ப்பா!!”

அக்கா விஷயத்துல நான் அவசரப்பட்டுடேனோனு தோணுது ஷான்யா..அந்த பையன்கூட நல்ல பையன் தான்..”

அப்பா இப்போ ஏன் தேவையில்லாம யோசிக்குறீங்க..அக்கா இப்போ நல்லா தான் இருக்கா.மாமாஅவளை நல்லாவே பாத்துக்குறார்.”

ம்ம்..”

என்னாச்சுப்பா?!”

இல்ல மா இப்போ எல்லாம் இந்த குற்றவுணர்ச்சி ரொம்பவே இருக்கு.கல்யாணம்னு சொன்னதும் உன் முகத்துல இருக்குற சந்தோஷமும் நிம்மதியும் அவளுக்கு அப்போ இருந்ததேயில்ல.என் பொண்ணு என்னை நம்பி அவளோட விருப்பத்தை சொன்னா ஆனா நான் அதை மதிக்காம அவளுக்கு ரொம்ப பெரிய கஷ்டத்தைக் கொடுத்துட்டேன்னு தினமும் மனசுக்குள்ள என்னை நானே நொந்துக்குறேன்.

நீங்க ரெண்டு பேருமே எனக்கு நல்ல மகள்களா தான் இருந்துருக்கீங்க நான்தான் பாசமான அப்பாவா இல்லாம போய்ட்டேன்..”

அப்பா ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க..நீங்க எப்பவுமே எங்களுக்கு நல்லது மட்டும் தான் நினைப்பீங்க பண்ணுவீங்க.அவ உங்களை எப்பவுமே தப்பா நினைச்சதில்லப்பா..”

ம்ம் உன் விஷயத்துலயாவது அப்படி எதுவும் நடக்காம இருந்துதேனு தினமும் கடவுளுக்கு நன்றி சொல்றேன்.வாழ்க்கையின் இத்தனை வருஷத்துல என் குடும்பத்துக்கு எது நல்லதா இருக்கும்னு நிறைய தடவை யோசிச்சு ஒரு ஒரு முடிவையும் எடுப்பேனே ஒழிய அவங்களுக்கு பிடிச்சதா இருக்குமானு யோசிக்காம போய்ட்டேன்.இப்பவும் நம்ம மாப்பிள்ளையால தான் இதை நான் புரிஞ்சுருக்கேன்.மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையை சந்தோஷமா வாழு ஷான்யா மா..”,என்றவர் அயர்வாய் அங்கிருந்து நகர்ந்திருந்தார்.

அப்பா இத்தனை பீல் பபண்ணி மனசுவிட்டு பேசி நான் பார்த்ததேயில்லங்க..உங்களால தான் இது நடந்துருக்கு..தேங்க் யூ சோ மச்..”,என்றவள் அவன் கன்னத்தில் அழுந்த இதழ்பதித்திருந்தாள்.

ஹே!!என் மாமனார் வாழ்க..அவரால தான் இத்தனை நாள் என்னை காயவிட்ட என் பொண்டாட்டி எனக்கு ஒரு முத்தமாவது கொடுத்துருக்கா..”,என்றவனின் கையை லேசாய்கிள்ளினாள்.

ஹா ஹா ஜோக்ஸ் அப்பார்ட் ஷான்..இதெல்லாம் சத்தியமா அதிசயம் மாதிரி தான் இருக்கு..அன்னைக்கு நீ பொண்ணு பார்க்க வராங்கனு சொன்னதுலயே நான் மொத்தமா உடைஞ்சு போய்ட்டேன்.அவ்ளோ தான் இனி லைப்பே போச்சுனு நினைச்சு துடிச்சுட்டேன்.அந்த ஒரு நாள் இராத்திரி வாழ்க்கையில மிகப் பெரிய நரகம் ஷான்.

மறுநாள் அங்கிள் வந்து விஷயத்தை சொன்னவுடனே உலகத்துல இருக்குற அத்தனை கடவுளுக்கும் நான் தேங்க்ஸ் சொன்னேன்.அந்த ஒரு நிலைமை எனக்கு பிடிக்காதவங்களுக்கு கூட வரக்கூடாதுனு வேண்டினேன்.”

ம்ம் உங்ககிட்ட என்னதான் காதலும் இல்ல ஒண்ணுமில்லனு தெம்பா பேசினாலும் பொண்ணு பார்க்க வராங்கனு சொல்லும்போது உங்க முகத்தை பார்த்து தவிச்சு போய்ட்டேன்..அது என்ன மாதிரியான பீல்னு கூட எனக்கு அப்போ தெரில.

ஆனால் சாய்ந்திரம் மாப்பிள்ளை வீட்டுகாரங்கனு ஒரு கூட்டமே வந்து உக்காந்து யாரோ ஒருத்தர் முன்னாடி என்னையும் போய் நிக்க சொன்னப்போ மனசளவுல நொந்துட்டேன்.ஏதோ நமக்கு சம்மந்தமே இல்லாத ஒருத்தரோட நம்மளை இணைச்சு பாக்குறாங்களேங்கிற பீல்.அப்போவே பூகம்பமோ இல்ல ஏதாவது வந்து என்னை மண்ணுக்குள்ள அனுப்பிறாதானு உண்மையா வேண்டினேன்.

அப்போ அந்த கடவுளே நினைச்சாரோ என்னவோ வரதட்சணை பத்தின பேச்சு ஆரம்பிச்சப்போ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.