தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 13 - கண்ணம்மா
சிவகாமியிடம் திரும்பிய ஈஷ்வர் தாத்தா கூப்டாங்க அத்தை என்றான். தாத்தாவையே கவனித்தமையால் யாரும் ஈஷ்வர் பௌவ்வை அவன் இடது கையால் அணைத்தவாறு நின்றதைக் கவணிக்க வில்லை. அம்மா கொஞ்சம் என் அலமாரில உள்ளறையில் ஓரமா செவப்பு துணி சுத்தி இருக்கப் பெட்டியை எடுத்தாயேன் என்று சிவகாமியையும்.
சாமித் தட்டை கொண்டுவாமா என்று கணகாம்மிகையையும். உன் அத்தை பொட்டியை தொரந்து அவ இடுப்பு பையை எடுத்தாமா என்று வள்ளியையும் ஏவி நிமிடத்தில் வரவைத்தவர். சிவகாமின் கையில் இருக்கும் பெட்டியைத் கனியிடம் தரச் சொன்னார்.
அதை வாங்க யோசித்த கனியை ஆதி சமாதானம் செய்து வாங்க வைக்க, அதைத் திறந்து அதில் இருப்பதை ஈஷ்வரிடம் தரச் சொன்னார். அவரும் அதன் படி செய்தார். (அவர் தந்தது தன் மாமியாரின் தாலி சரடு என்பது அவர் அரிந்திருக்க வாய்ப்பில்லை.) சற்றும் யோசிக்காமல் ஈஷ்வர் அதனை வாங்கி மனதார அனைத்துத் தெய்வத்தையும் வேண்டி நண்றியுரைத்து தன்னவளின் கழுத்தில் அணிவித்தான்.
சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்து போய் நிற்க கனிகாம்பிகையை வைத்து ஈஷ்வர் கையால் பௌவ்வின் நெற்றியில் பொட்டு வைக்க வைத்தார்
வள்ளி கொண்டு வந்த மாமியாரின் இடுப்பு பை பரமேஷ்வர் கையில் கொடுக்கப் பட அதில் இருந்து ஒரு நீண்ட, பட்டையான, சுமார் 15 பௌன் மதிப்பில் ஆன காசு மலை ஒன்றை எடுத்து ஈஷ்வர் கையி் தர அதையும் பௌவ்வின் கழுத்தில் அணிவித்தான்.
மனதிற்கு இனியாலை தன் இல்லத்தாலாய் அல்லவோ மாற்றிக் கொண்டான். மனதில் அரியதொரு பொக்கிஷம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கரம் சேர்ந்த பூரிப்பு. நிஜம் தான் என்னவள் எனதாகி போனாளே என்று மனம் ஆனந்த கூத்தாட, முகத்தில் அத்தினை கர்வம். அவள் கழுத்தில் அவன் தாலி அணிவித்த ஷனம் அவன் வாழ்வின் அனைத்து இன்பத்தையும் ஒன்றாய் பெற்றவனாய் மாறினான். என் குட்டிமாடி நீ உன்னை யாரோ ஒருவனுக்கு மனைவியாக நான் பார்ப்பதா? முடியதடி முடியாது என்று கலங்கிய நெஞ்சிற்கு அதே நொடியில் மருந்திட்டுவிட்டான். இருண்டு போய் இருந்த என்னவளின் முகம் பளிச்சிட்டதை கண்டேனே என்று அவன் அதிரும் படி இருந்தது அவள் கண்கள் சிந்திய இரு பெரிய கண்ணீர் மணிகளைக் கண்டவனுக்கு.
தாத்தாவின் உடல்நிலையை மனதில் கொண்டு திருமணதிருக்கு சம்மதம் தெரிவித்தவள் உள்ளத்தால் இரந்துகொண்டிருக்க உயிர்நீராய் ஊற்றப்பட்டது தான் தாத்தாவிடம் ஈஷ்வர் கேட்ட பதில். எனக்கு உங்கள் பேதியைக் கல்யாணம் செய்து தாரமாட்டீர்கலா? என்று அவன் கேட்கும் தோணியை பாறேன், எனக்குத் தான் கல்யாணம் செய்து தரவேண்டும் என்ற