அழுத்தம். என் அழகன் டா நீ என்று அந்த நொடியும் அவளவனை கொஞ்சத் தூண்டியது அவள் மனம். அவன் தாத்தாவின் தலையாட்டல் நிறைவு பெறும்முன் ஆதீபாவைும் சிவாமாவையும் அழைத்த வேகம் முகத்தில் சிரிப்பை வரவழைக்க அவனைத் தவிர யாரையும் பார்க்க வில்லையாவாள்.
ஆனந்த அதிர்ச்சி என்பது இதுதான் கேட்டுக்கங்கப்பா.... அவளுக்குமே நம்பமுடியாதது. அவன் யாரிடமும் சமந்தம் கேட்காமல் சடார் என்று தாலியை அணிவிப்பான் என்பது. கிட்டத்தட்ட 2 நிமிடத்தில் திருமணமே முடிந்தது. நல்ல வேகம் தான். அவன் மனைவி என்ற உணர்வே இவளுள் இன்ப ப்றளயத்தை உண்டுபண்ணியது. இவளின் மூன்று அண்ணன் மார்களும் ஈஷ்வர் செய்த காரியத்தைத் திகிலுடன் பார்க்க, ஆதி ஈஷ்வரை நெருங்கி அவன் கையைப் பிடித்து அவனை தன் புரம் திருப்பினார்.
உனக்கு என் பெண்ணை பிடித்துத் தான் இந்தக் கல்யாணத்தை செய்து கொண்டாயா? அவள் என் மகள் என்பதை அழுத்தமாய் பதிவு செய்வதாய் அவர் கேட்க, அவர் கையை பிடித்ததும் மனதில் தோன்றிய பயம் குழப்பம் கலக்கம் எல்லாம் துணிக்கொன்று துடைத்தார்போல் விலக்கியது, அவர் என்னவளின் மேல் அவருக்கு மட்டுமே உரிமை இருப்பதாய் கூறியது. பொங்கினான் புராமையில்.
மகள் தந்தையின் உரவு என்றுமே தனித்துவம் படைத்தவை என்றும். மகள் தந்தையின் மேல் கொண்ட அன்பை கணவன் என்ன செய்தும் முழுமையாய் பெற முடியாது என்பதையும். கணவன் பெண்ணுக்கு முக்கியம் என்பதை முழுமையாக உணர்த்த ஒரு நல்ல தந்தையால் மட்டுமே முடியும் என்பதையும் புரிந்துக்கொல்லாமல் போனானே நம் நாயகன். நாலை அவன் மகளால் உணர்வானோ என்னவோ....
பௌவ்வாே ஆதியைக் கலவரத்துடன் கவணிக்க, ஈஷ்வர் பௌவ்வின் கையை பிடித்து தன் புரம் இழுக்க அவள் அவன் மீது மோதி நிற்கும்படி ஆனது. அவளை ஒருகையால் சுற்றி அனைத்து, இவள் என் மனைவி மாமா என்றான். அவன் குரலில் அவ்வளவு தெளிவும் அழுத்தமுமாய் வந்தது. அவளை அணைத்தார்போலவே அவன் பரமேஷ்வர் கால்களை பணிந்தான். இப்போது என் பொண்டாட்டியை நான் பாத்துக்ரேன் நீங்க ஆஸ்ப்பிடல் வாங்க உங்களை சர்வீஸ் பண்னனுமாம் அப்போதுதான் உங்கள் பேத்தியுடைய பிள்ளைங்கல உங்கலால வளர்க்க முடியுமாம். அவங்கலோட விளையாட முடியுமாம். வாங்க கிளம்பலாம் என்று அவன் விலையாடடாய் கூறியதும் பரமேஷ்வரின் பதில் என்னவாக இருக்கும் என்று அனைவரும் முழிபிதிங்கிப் போய் காத்திருக்க அவரோ .... ஹா ஹா ஹாாா... என்று சத்தம்போட்டு சிரித்தார்.