கொண்டார் அந்த மனிதர்.
ஈஷ்வருடன் அவர் சரளமாக பேசிவிட்டார் ஆனால் பிறகு தான் அவன் அமைதியாக புன்னகைப்பது அவர் மனதில் பட அவருக்குப் பாஷை புரிவில்லையா என்று தமிழில் வினவினார். பெரிதாக சிரித்தவன் அவர் மொழியிலேயே அவருக்குப் பதிலும் சொன்னான். ஆனால் அவரைத் தந்தை என்று அழைத்துப் பேசினான். உங்கள் செல்ல மருமகள் உங்களை எப்படியெல்லாம் பாடுபடுத்தியிருக்கிறாள் என்பதை முழு மகிழ்ச்சியுடன் சொன்னீர்கள் அதை நானும் கேட்டு மகிழ்ந்தேன். நானும் உங்களைப்போல் இல்லை என்றாலும் அவளை அதே மாதிரி மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொல்ல முயற்சிக்கிறேன் என்று உறுதியளித்தான்.
அவனை டாக்டர் அங்கிலுக்கு அறிமுகப்படுத்தியதும் சிவா அம்மாவைப் பார்த்து வர கிளம்பியவள் டூலைடின் சத்தமான சிரிப்பைக் கேட்டு அங்கு வந்தாள். அவள் முகமும் மகிழ்ந்தே இருந்தது. கமல் மாமா கனி அத்தை என்று அனைவரையுமே டுலைட்டுக்கு தெரிந்தே இருந்தது. அனைவரையும் சற்று ஓய்வு எடுத்து பின் வரும்படி பணிந்தார் அந்த மருத்துவர். தாத்தாவுடன் தங்குவதற்கு ஆல் ஆலிற்கு நான் நான் என்று போட்டி போடக் கடைசியில் ஆதி தலைமையில் வீட்டின் அனைத்துப் பெரியவர்களும் வீட்டிற்கு போய் ஓய்வெடுக்கும் படியும் பரமேஷ்ஷும் அமரரும் வருவதால் அவர்களை அழைத்து வர மகன் கமல் செல்வதாகவும் நிவி பெரியவர்களுக்கு உணவும் இங்குத் தங்கும் அனைவருக்கும் உணவுடன் வருவதாகவும் முடிவு செய்தனர். டாக்டர் கூறியபடி தாத்தா கண் முழிக்கும் வரை நான் இங்கேயே இருக்கிறேன் என்று ஈஷ்வர் கூர நக்ஷ் அண்ணனுடன் இங்குத் தங்குவதாக கூறினான். பௌவ்வை அமைதியாக ஒரு சேரில் அமர்ந்து இருந்தாள் அதில் எதிலும் கலந்து கொல்லாமல்.
நக்ஷ் ஈஷ்வரிடம் அவளைக் காட்ட ( நேற்று பூர உடம்பு முடியாமல் அப்படியே காய்ந்த சிறகா கிடந்த இப்ப என்னவாம் இவளுக்கு என்று மனதில் யோசித்தவன் ஆதியைப் பார்க்க) அம்முமா என்று மகளை அழைத்தார் ஆதி. ஆதீபா நான் தாத்தா கூடவே வீட்டக்கு வந்துடுவேன் என்றாள். அவள் பார்வையில் இருந்த கெஞ்சல். மனதைப் பிழிய சரிடா என்றார் அவளை அணைத்தவாறு.
இன்னும் அமர் மற்றும் பார்வதியை ஈஷ்வர் காணவில்லை. அவளின் பரமூ அண்ணாவையும் தான். ஈஷ்வரை தனியாக அழைத்தவர் மாப்பிள்ளை அவள் என் ஆசை மகள் மட்டும் இல்லை எங்கள் குடும்பத்தின் மொத்த சந்தோஷம். என்று அவர் ஏதோ சொல்ல தயங்க மாமா உங்கள் மகளை எப்பாவுமே சந்தோஷமா மட்டும் தான் பார்ப்பிகள் சரியா... என்றதும் மருமகனை அணைத்துக் கொண்டார். அனைவரையும் வண்டியில் ஏற்றி வழியனுப்பி வந்தனர்