தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா
என்னடாமா என்று அவள் அருகில் ஓடினான் ஈஷ்வர்.
தாத்தாப்பா கண்விழித்துட்டாராம். நம்மை தேடுகிரார்ராம் வாங்கப் போகலாம் என்று அவன் கையை விடாமல் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினாள் அவன் மனைவி. ஏய்... பொருமயாடா என்று கூறினானே தவிர அவனும் அவளுடன் ஓடவே செய்தான். அவள் மகிழ்ச்சி நிறைந்த முகத்தை ரசித்தபடி.
வழியில் கண்ட நர்ஸ்கள் வேலை செய்பவர்கள் அனைவர் முகத்திலும் புன்னகை பூர்த்தது. பார்வதி மேடம்மின் மகள். குனத்தில் அப்படியே ஆதி சார்ரின் ப்ரதி. அவள் என்றுமே இந்த ஊர்ரின் இளவரசி. அவள் முகத்தில் புன்னகை என்பது ஒரு அங்கமாகவே இருக்கும் ஆனால் இந்த மகிழ்ச்சி நிறைந்த முகமோ அவள் பூரண அழகையும் அப்பட்டமாக காட்டுகிறதே...
"ஜோடியாக இவர்களை பார்க்க தான் எவ்வளவு அழகாக இருக்கின்றனர். கம்பிரமாண அழகன் அலட்டல் இல்லாத அமைதியாண அழகி". தெரியாதவர்கள் கூட இவர்களை பார்த்த நொடி தோன்றும் என்னம் இதுவாக தான் இருக்கும்.
தாத்தாவின் அறையை அடைந்ததும் திரும்ப அவள் கையில சின்ன நடுக்கம். அதை உணர்ந்து கொண்டவன் அவள் பிடித்திருந்த தன் கையை எடுத்து அவள் தோலைச் சுற்றி வளைத்து பிடித்து கொண்டு வா என்று அழைத்து சென்றான். மலையாய் தெரிந்த விஷயம் காற்றில் கரைந்து போனது. சிரித்த முகமாய் உள் நுழைந்த தன் பேரப்பிள்ளைகளை மனதார வாழ்த்தி ஆண்டவனிடம் இவர்களின் வாழ்க்கை சந்தோஷமும் வெற்றியும் நிரைந்திருக்க வேண்டினார். இவர்களை ஒன்று சேர்த்ததர்கு மனதார நன்றியை சேற்பதர்க்கும் மரக்க வில்லை.
உள்ளே நுழைந்தது தான் தாமதம் தாத்தாவை கட்டி அனைத்து முத்த மழை பெய்யப்பட்டது. (நீங்க வேர ஆர்வத்துல நம்ப பௌவ்னு தப்பா நினைத்து விடாதீர்கள் அந்த வேலையை பார்த்து நம் சாரி.. பௌவோட ஈஷ்வர். ஹாஹாஹா....) தாத்தாவை அவனிடம் இருந்து பிரித்து எடுக்க பொவ்விர்கும் அவள் தோழி ரதிக்கும் எஷ்ட்ரா எனர்ஜி தேவை ப்பட்டது. அமைதியாக தாத்தாவின் இருதயத்துடிப்பு ரத்த ஓட்டத்தின் அலவு போன்றவற்றை எல்லாம் ஒரு ஓரமாக நின்று சரிபார்த்து கொண்டிருந்த ரதி கவனிக்கவில்லை தன் தோழியின் தோலில் கையைப்போட்டு அழைத்து வந்தவனை. யாரோ ஒருவன் தாத்தாவின் மிது பாய்வதைக் கண்டு அரண்டவள் தன் தோழியுடன் சேர்ந்து