(Reading time: 9 - 17 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

“பேசாமல் மீண்டும் கடலுக்குள் நீந்தி போவோமா” நடக்கக் கூட பலமில்லாமல் கிடந்தவள் நீந்துவதை பற்றி யோசித்துக் கொண்டே கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது தான் அவள் விழிகள் அந்தக் காட்சியைக் கண்டன.

சூரியன் என்ன கடலில் மிதந்து வருகிறதா. இல்லை நீர் செந்தீப்பிழம்பாகிப் போனதா.

செந்நிற ஒளி ஒன்று அவளை நோக்கி வந்து கொண்டிருக்க அவள் படுத்திருந்த நிலையில் இருந்து நிமிர்ந்து அமர்ந்தாள்.

முன்தினம் அவளைக் காப்பாற்றிய ஆமை தான் வந்து கொண்டிருந்தது.

தேன்மொழி ஆச்சரியத்தில் ஒரு கணம் உறைந்து போனாள்.

எங்கிருந்து அவளுக்கு பலம் வந்ததோ. ஆமையை நோக்கி இரு கரம் விரித்தபடி ஓடினாள்.

ஆமையும் தேன்மொழியை நோக்கி தான் நகர்ந்து வந்தது.

அவள் அருகே வரவும் கூட்டுக்குள் இருந்த கரம் ஒன்றை நீட்ட அக்கரத்தை அவள் பற்றிக் கொண்டாள்.

அடுத்த நொடி தனது முதுகில் அவளை ஏற்றி விட்டிருந்தது அந்த ஆமை.

ஆமையின் தலைப் பகுதியைக் கட்டிக் கொண்டு கண்ணீரோடு முத்தமிட்டாள்.

யாருமற்ற தீவில் அவளை கொண்டு வந்து விட்டு விட்டதோடு கடமை முடிந்தது என்று சென்று விடாமல் அவளை மீண்டும் தேடி வந்திருக்கிறதே இந்த ஆமை.

ஆமை என்று சொல்வதா இல்லை வேறு ஏதும் பிராணியா என்று அவளுக்கு இன்னும் தெரியவில்லை.

மனிதர்களை விட அன்பும் அறிவும் அதிகம் கொண்டிருந்த அந்த உயிர் மீது அவளுக்கு அன்பு பெருகியது.

அந்த ஆமை அவளை சுமந்தபடி கரை வந்து சேர்ந்து அவளை இறக்கி விட்டது.

“யானை சவாரி செய்திருக்கேன். ஆனால் ஆமை சவாரி இப்போது தான் செய்கிறேன்” அவள் பயம் எல்லாம் விலகி தைரியம் பிறந்தது.

அப்போது தான் அவள் கவனித்தாள். ஆமையின் மற்றொரு கரத்தில் கொத்து கொத்தாக கடல் தாவரம்.

அவள் அந்த வகை தாவரத்தை நன்கு அறிவாள். அது மனிதர்கள் உண்ணக்கூடிய வகை. அதிலும் அதில் நீர்ச்சத்து அதிகம் உண்டு.

“இந்த பிராணிக்கு எப்படி தெரிந்தது” அவள் யோசித்தாள்.

கயிறில் சிக்கிக் கொண்ட ஆக்டபஸ்ஸை காப்பாற்ற உதவி செய்து அவளையும் காப்பற்றி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.