ஓட்டிவந்தது அளைச்சல் எல்லாம் சேர்ந்து அப்படியே அவனும் தூங்கிப்போனான். அவள் கால் அவன் மடியில் இருக்க அவள் சேலை முந்தானை நுனியை அவன் கையில் பிடித்துக்கொண்டு தூங்கிக்கொண்டு இருந்தான் ஈஷ்வரன்.
பரமூ தன் செல்போனை எடுத்து அதில் இந்த போஸை போட்டோ எடுத்துக்கொண்டு டேய் தூங்குமூஞ்சி எழுந்துருடா என்று குரல் கொடுத்தான். குரலில் அவ்வளவு குதுகலம் இருந்தது. இரண்டு குரலில் ஈஷ்வர் எழுந்துவிட்டான். எந்த சத்தத்திர்க்கும் அசைந்து கொடுக்கவில்லை பௌவ். இது தாத்தா மற்றும் பரமூவிர்கும் ஆச்சரியம் தான். சிறு வயதிலேயே சின்னமாக சத்தம் ஏதும் கேட்டபடி இருந்தால் தூங்க மாட்டாள் பௌவ். ஆனால் இப்போது என்னவோ பல நாள் தூக்கத்தையும் சேர்த்து வைத்து தூங்குபவள் போல் இப்படி தூங்குகிறாளே....தூங்கட்டும் என்று எண்ணி தாத்தாவும் பேரனும் அமைதி யாக இருந்தனர்.
தூக்கத்தில் இருந்து எழுந்தவனும் அதயே தான் சொன்னான். இப்பதான் விடியக்காத்தால ஒரு நாளு மணிக்கு படுத்தாள் விடுடா அவ தூங்கட்டும் நான் தோ வரேன் என்று குலியலறையினுல் சென்றான். என் பாப்பா நிம்மதியா தூங்கரா தாத்தா... மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நம்ப பாப்பா இனி தெனமும் நிம்மதியாக இருப்பாடா.... பேறான்டீ
ம்ம்ம்ம்ம்.... ஆமாம் தாத்தா ஈஷ்வர் அவளை நல்லா பார்த்துப்பான் தானே.....?????
அதற்குள் ப்ரெஷ் செய்து கொண்டு வந்தவன், அட மாம்ஸ்.... என்ன இன்னும் வெட்டி பேச்சி பேசிட்டு இருக்க டெஸ்ட் எடுக்க ஆள் வரளயா கூப்பிட்டு பார்தாயா???
எல்லாம் முன்னாடியே வந்தாங்க அத்தான்... தாதா தான் மிரட்டி துரத்தி விட்டிருக்கார். -டாக்டர் ரதி.
ஏய் வாமா ரதி நான் யாரயும் மிரட்டல மா அப்பரமா வர சொன்னேன் அவ்லோதான்.
ஏன் ஹேன்சம் இங்க இருக்க பிடிக்களனு சொன்னிங்களே.... _ஈஷ்வர்.
(இப்ப கேட்டு பாருடா அவர் பேத்திய நீ பார்துக்ரதை பார்க்க இன்னும் எவ்வளவு நாள் வேண்டும் ஆணாலும் இங்கவே இருப்பார்) டேய் நீ வேர காளையிலேயே ஆறம்பித்துவிடாதே... ரதிமா நீ எல்லாம் ரெடி செய்துட்டல ஸ்டார்ட் பன்னுடா... என்று வேலையில் இரங்கினான். -பரமூ
அதர்குள் இவர்கள் டீ குடித்துவிட்டு பௌவ்விர்க்கு ப்ளாஸ்கில் வைத்துவிட்டனர். பொருமையாக தாத்தா நடக்க முட்பட்டார். டேய் நான் தாத்தாகூட போய்ட்டு வரேன் நீ பாப்பா கூட இரு என்று அவன் ஏதோ நியாபகத்தில் கூர ... (ம்ம்ம்ம் அது சரி பாப்பாவா ) போய்ட்டு வாங்க மாம்ஸ் உன் பாப்பா அழாமல் பாத்துக்ரேன் என்றான் ஈஷ்வர் கிண்டல் செய்யும் வகையில்.