சேர்ந்தனர். மூத்தவர்கள் அனைவரையும் உட்கார்ந்து பார்க்க வைத்து இவர்களே பரிமாறினார். தாத்தாவின் மனம் அவ்வளவு ஆணந்தத்திலும் வாடியது அவரின் சிவூவை நினைத்து. ஆதி தன் தகப்பனை கவனித்தாலும் எங்கு தாம் போய் கேட்டு இன்னும் மனம் வருந்த போகிறார்கள் என்று கண்டுகாதது போல் பார்த்து இருக்க.
மெல்லிய கொளுசொலியுடன் வந்தது யார்
ஒரு நிமிடம் மனிதர் அப்படியே உரைந்து விட்டார். அது...... அவள் ...
என் என் என் சிவூ தானே என்கிரது அவர் இதயம்.
பார்பதர்கு பாரிஜாதம் பாட்டியைப் போல் இருக்கும் பேத்தி குணத்தில் அப்படியே சிவகாமியின் நகல். மங்களமும் சாந்தமும் கொண்டவர் என்றாலும் கண்டிப்பானவர்.
பரமேஸ்வருக்கு அவர் சிவகாமி தான் எல்லாமும். அவர் மனைவி ஒன்று சொன்னால் சரியாக தான் இருக்கும். இவருக்கு எந்த முடிவையும் சரியா தவரா என்று கேட்டு முடிவு செய்ய உதவும் தோழி அவள்.
கலேஜ் முடிந்து பௌவ்விடம் திருமணத்தைப் பற்றி கேட்டதும் அது உங்கள் வேலை என்று கூரி கழண்ட பேதியை அழைத்துச் சென்ற பாட்டி. ஒரு தட்டில் புடவை ,நகைகள், மஞ்சள், குங்குமம், மை, (வளையல் முதல் கொளுசு வரை அனைத்தும் அடங்கிய தட்டை காண்பித்து நீ கல்யாணம் முடிந்து முதல் முதல் புருஷன் வீட்டுக்கு போகும்போது இதை தான் போட்டுகிட்டு போகனும் சரியா ராஜாத்தி என்று கேட்க.
அருகில் இருந்த பரமூதாத்தா அடியேய் இன்னைக்கு தான்டி நாங்க கல்யாணப்பேச்சையே எடுத்திருக்கோம். அதர்குள் எப்போது வாங்கினாய் இது அனைதையும்.
போன மாசம் குலதெய்வம் பூஜைக்கு போனோமே அப்போ தான் மனசுக்கு பட்டு தம்பி ஆசாரியை வைத்து செய்து தரச் சொன்னேன். நேத்தி தான் கொண்டு வந்து தந்தாங்க , சாமி அறையில் வைத்து விட்டு படுக்க போனேன்.. இன்னைக்கு அருள் கல்யாண விஷையத்தை எடுத்துட்டான். அதான்ங்க பூஜை அறையில் இருந்து நேராக என் ராஜாத்தி கிட்ட கொடுத்துடளாம்முனு.
பாட்டி மனதில் அவ்வளவு மகிழ்ச்சி இதை சொல்லும் சமயம். தாத்தாவிர்கும் அனைத்து நகையையும் காண்பித்து அதை ஏன் இப்படி செய்ய சொன்னார் என்பதையும் விளக்கினார்.
எழுப்புங்கள் சேர்ந்து தருவோம் என்று பாட்டி கூர இருவரும் சேர்ந்து ஜோடியாக கொடுத்த சீர்.
காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று தட்டை வாங்கிய பேத்தி, பாட்டி நீங்கள் இதை என் திருமணம் முடிந்து தரலாம் இல்லையா? என்று கேட்க