இல்லடா ராஜாத்தி அப்போ நாங்க யாரும் அந்த நிலையில் இருக்க வாய்ப்பு இல்லை. எங்க வீட்டு குலதெய்வம் நீ. உன்னை ஒரு வீட்டுக்கு மொத்தமாக அனப்பரது எவ்வளவு வலிக்கும் அந்த சமயம் இதை நீ நியாபகமா உடுத்தனும் சரியா?
கேட்டவளின் கண்கள் கலங்க ... நீ ஏன் டி இப்பவே என் பேதிய கலங்கடிக்கரவ என்று மிரட்டி தன் சோகத்தையும் மறைத்தவர் என் நண்பனின் வீட்டுக்கு தான் செல்வாள் என் பேத்தி என்று நினைத்தவர் இருவரையும் தேத்தி சந்தோஷத்துடன் இருந்தார்.
அதோடு அந்த நகை கண்ணில் பட்டது நிவியின் திருமணம் நடந்த அன்று தான். சிவா பாட்டி அந்த நகைகளை பார்த்து பார்த்து அழுவதும். பௌவ் அவரைத் தேற்ற முடியாமல் அழுததும். பரமூ தாத்தா நகைகள் 4 வருடங்களாக பௌவ்விடம் இல்லை பாட்டியிடம் தான் இருந்தது என்பதை அறிந்து கொண்டார்.
இதோ இப்போது அணிந்து வந்திருக்கிறாளே என் பேத்தி நியாபகமாய். ஆதி, அமர், பார்தா மற்றும் அமிர்தன் அனைவரும் எழுந்தே நின்று விட்டனர். பௌவ் படியில் இரங்கும் சமயம் அவளின் வளதுப்பக்க முகம் தான் கானக் கிடைத்தது அனைவருக்கும். பாட்டி அனிவதை போலவே கம்மல் மூக்குத்தி மற்ற நகைகள் அதனுடன் அவரின் காசு மாலை. புடைவையையும் அவறைப்போல தான் அணிந்து இருந்தாள். தலையை பாட்டி வழக்கமான விஷேஷங்களில் இருப்பது போல் போட்டு வர அசப்பில் தாயைப் போலவே தோண்றிவிட்டது மகன்களுக்கு. சிவா , பார்வதி, அம்பிகை, வள்ளி நால்வரும் எழுந்து படி அருகில் நின்று விட்டனர். இரண்டாம் அன்னையாகிய மாமியார் ஆயிற்றே. உணவு முடிந்து எழுந்த வேளையாட்கள் வாழ்த்திவிட்டு செல்ல.
ம்ம்ம்ம்... வாங்க வாங்க எல்லாரும் சாப்பிடலாம் என்று குடும்பத்தில் உள்ள அனைவரையும் அமர்த்தி பரிமாறினாள். உதவிக்கு வந்த யாரையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள வில்லையே அவள். தங்கையின் கையில் பரிமாறி சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகிறது என்று அண்ணன்கள் நினைத்து இப்போது மகிழ்ச்சியுடன் உண்ண... இரந்த தாயே பரி மாருவதாய் தோன்றியது சிவகாமி பாரிஜாதம் பெற்ற மக்களுக்கும் மருமகள்களுக்கும். அனைவரும் சாப்பிட அமர்ந்ததும் தாத்தா மட்டும் தனியா இருப்பாறா? அவர் என் அருகில் அமர்ந்து கொண்டு பேசுவார் என்று அமர்த்திக் கொண்டான் ஈஷ்வரன்.
ஆனால் மனிதர் ஒரு வார்தைக் கூட பேசவில்லை. இவள் பரிமாரிய உணவை சாப்பிட்டவர்களை விட அவளைப் பார்பவர்கள் தான் அதிகம். தாத்தா... என்று ஈஷ்வர் கத்தியதும் தான் அனைவரும் ஒரு நிலைக்கு வந்தனர். சத்தமாக கத்துவதர்கு முன் பல