எங்க அப்பா அம்மா யார் சொந்தத்திலும் என் வயதில் பிள்ளைகள் இல்லை எல்லாரும் என்னை விட சிறியவர்கள். நான் தான் என் முழு குடும்பத்துக்கும் முதல் வாரிசு.
(முருகா.... தேங்க்ஸ் பா.... இவளுக்கு யாராவது ஆளு இல்லை அத்தை பையன் மாமா பையன் கூட இல்லாமல் எனக்காகவே பாதுகாப்பு சேவைகள் செய்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் முருகா...) பார்த்தாலே தெரியுது ... - பரமூ
என்ன தெரியுது...
ம்ம்ம்ம்உன்னை (எனக்காகவே) வெயிலுக்கே காட்டாமல் வளர்த்து இருப்பதும், பாசத்தை பால் பாதாம் முந்தியில் காட்டி வளர்த்ததும் தான். - பரமூ
சே.... என்று இடத்தை காலி செய்துவிட்டாள்.
(அன்னை விட்டு சென்றதும் போர் அடிக்க அங்கு வைத்திருக்கும் 1 வகுப்பு புத்தகத்தில் இருந்த பொம்மைகளை பார்த்து இருந்தவன் பேட்டசி குரல் கேட்டு சென்று பார்த்தால் நல்ல ஜம்னு பார்தாலே வாய் பொளக்ர அழகில் ஒரு பெண். லைட் பிங்க் நிறத்தில் புடவை அவள் கலருக்கு சும்மா அள்ளுகிறது போ... அவள் துரு துரு நடை... அவள் ஸ்நேகிதியிடம் தன்அன்னையான வள்ளியை பற்றி பேச எக்ஸ்ட்றா அழகுடன் தெரிந்தாள். கண்டிப்பாக ஆசிரியை தான் என்று என்னி அன்னை வந்தது அவளை அழைத்துக் கொண்டு தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று முடிவே செய்துவிட்டான். ஆனால் இப்போது தான் ட்வெல்த் என்று பளீர் பல்பை பார்சல் செய்தாளே பார்களாம்... பாவம் நம் பரமூ.
அவன் சேரில் சாய்ந்து அப்படியே தூங்கி விட, சற்று நேரத்தில் தங்கத்தை அழைத்துக் கொண்டு வந்த மகாவை அவன் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மகா தங்கத்திடம் ஆபிஸ் ரூம்மில் இருந்த ஒருவரைப் பற்றி சொல்ல அவள் இவளுடன் வந்தாள். நெஜமாவே அழகன் தான்.
ஏய் மகா இவர் தான் இனி நமக்கு ப்ரின்ஸியா டீ... நான் இங்கயே இருந்துடுவேன் டி படிச்சிட்டு கூட இங்க தான் மிஸ்ஸா வந்துடுவேன். அதுவும் அசிஸ்டன்ட் ப்ரின்ஸியா ஸ்ரைட் ப்ரோமோஷன் வாங்க ஏதாவது வழி இருக்கா டி.
உர்... என்ற முகத்துடன் ஏன் என்று கேட்க
பின்ன இப்படி ஒருத்தனை தனியா விட்டா கொதிக்கிட்டு போய்டுவாளுகளே... அதன் கூடவே இருந்து பார்த்துப்பேன்.
ஏய் தங்கம் அவர் தூங்குறார் வெளியே வா என்று அடித்து இழுத்து வந்த கதை இன்று வரை பரமூ அறியவில்லை.