Page 3 of 11
வைத்தார்.அவளின் அப்பத்தா சொன்னதை போல அவள் அந்த வீட்டின் ராஜகுமாரி தான். பிறந்த உடன் கந்தசாமியின் கைகளில் அவளை கொடுத்தபோது அப்படியே ரோஜா இதழ்களை அள்ளி எடுத்தது போல இருந்தவள் அப்போதிருந்தே அந்த வீட்டின் ராஜகுமாரி ஆகிப்போனாள்.
"என்னக்கா காபியா? நானே வருவேன்ல நீங்க எதுக்கு எடுத்துட்டு வந்திங்க. " ஈரமாக இருந்த தன் நீண்ட கேசத்தை டவலால் துடைத்தவாறு கேட்டாள் மஞ்சரி.
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்பத்தாவின் பின்னே நின்று அவரின் கழுத்தை கட்டி கொண்டவள், "என்ன அப்பத்தா, காலைலயே பஞ்சாயத்து கூட்டிட்டு இருக்கீங்க போல" என்றவாறு அவரின் கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்சி கொண்டிருந்தாள்.