விளையாட்டாகப் பொழுதும் சாய்ந்தது. ரகு நிலா முதல் இரவுக்காக அவர்கள் அறை அலங்கரிக்கப் பட்டு கொண்டிருந்தது.
இருவரின் பெற்றோர் நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் மட்டுமே அங்கு இருந்தனர்.
ரகு, நிலா இருவருக்கும் அளங்காரம் எல்லாம் நடந்துக் கொண்டிருந்தது.
நிலாவிற்கு மனம் முழுக்க பயம் மற்றும் குழப்பம். விளையாட்டாக கல்யாண பேச்சி ஆரம்பித்து இன்று முதல் இரவு வரை வந்து விட்டது.
கழுத்தில் ரகு தொட்டுக் கட்டிய தாளி தொங்கினாலும், அவள் மனதில் ரகு இல்லை. மனதில் இல்லாத ஒருவனோடு எப்படி முதல் இரவு மன வாழ்க்கை. திருமணத்திற்கு முன்னால் அவனோடு பேச, இந்த கல்யாணம் வேண்டாம் என்று கூற ஒரு சின்ன சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லை.
இன்று இரவு அவர்கள் இருவர் மட்டும் தான் தனியாக இருப்பார்கள், ஆனால் இன்று பேசி எந்த பயனும் இல்லை. ஆனாலும் தன் நிலைமையை எடுத்து கூறிதான் ஆக வேண்டும்.
“தன் மனதில் இருப்பதைக் கூறுவது சரி, ஆனால் அதை அவன் எப்படிப் பார்ப்பான். ரகு எப்படிப் பட்டவன், இந்த கல்யாணம் என் இஷ்டப் படி நடக்கவில்லை, எனக்கு உன்னைக் கணவனாக ஏற்பதில் உடன் பாடு இல்லை என்று நான் முதல் இரவில் சொன்னால், அப்படியா சந்தோஷம், என்றா யாரவது சொல்வார்கள். ஊர் அரிய, உலகம் அரிய தாளி கட்டிவிட்டான். மனைவி என்ற உரிமையைப் பலவந்தமாக எடுக்க முற்பட்டால் என்ன செய்வது. பெற்றோர்களே கூட காப்பாற்ற வரமாட்டார்களே” என ஏகப்பட்ட குழப்பம் நிலாவின் மனதில்.
அதைக் கலைக்கும் விதமாக, நிலாவின் தாயார் குரல் “அலங்காரம் பண்ணது போதும், நேரம் ஆச்சி” என்று சொல்லிக் கொண்டே வந்தார்.
தன் மகளைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் அவருக்கு. அவளது பிடிவாதத்தால் திருமணம் தள்ளிப் போன போதெல்லாம் இந்த நாள் வந்துவிடாதா என்று அவர் கடவுளிடம் கேட்டிருக்கிறார்.
நிலா அவர் கால்ஐ தொட்டு ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள, அலங்கரிக்கப் பட்ட அறைக்குள் அனுப்ப்ப பட்டாள்.
சினிமாக்களில் வரும் அதே setup. உள்ளே வந்தவள் கையில் பால் சொம்பு, அறை முழுதும் அலங்காரம், படுக்கை மெத்தை முழுதும் பூக்கள் என இருந்தது.
மொத்த அறையையும் சுற்றிப் பார்த்தவளின் கண்கள் ரகுவை தேடியது. அவன் அறைக்கு